Tuesday, October 2, 2018

இந்தியாவிற்கு காட்டிக்கொடுக்கும் கஜேந்திரகுமார் கொம்பனியின் ரகசியக் கடிதம்! இதோ படியுங்கள்..

இந்திய இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக உண்ணாவிரதம் இருந்த திலீபனுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முண்டியடித்துக்கொண்டு இந்திய எதிர்ப்பு கோஷங்களை எழுப்பிவரும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய விடுதலை முன்னணியின் உறுப்பினரும், வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபையின் உறுப்பினருமான க.சிவராசா என்பவர் இந்திய தூதரகத்திற்கு பிரதேச சபையை காட்டிக்கொடுத்து எழுதிய கடிதம் ஒன்று எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இக்காட்டிக்கொடுப்பு தொடர்பாக தெரியவருவதாவது:

இந்திய சிதம்பர ஆதீனத்திற்கு சொந்தமான காணிகள் யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றது. இவற்றை பராமரிப்பதற்காக ஆதீனத்தால் நியமிக்கப்பட்டுள்ள நபரொருவரால் குறித்த காணிகளுக்கான வருவாய்கள் அறவீடு செய்யப்பட்டு வருகின்றது.

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபைக்குட்பட்ட சந்தை ஆதீனத்திற்கு சொந்தமான காணியில் செயற்பட்டு வருகின்றது என்பதுடன் அதற்காக வருடாந்தம் ஒரு லட்சம் குத்தகையும் செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ஆதீனத்தினரால் குத்தகை தொகை பத்து மடங்காக அதிகரித்து வருடத்திற்கு 10 லட்சம் ரூபா கோரப்பட்டுள்ளது. 60 லட்சம் ரூபா வருட வருமானம் கொண்ட சந்தைத் தொகுதிக்கு வெறும் நிலத்திற்கு மாத்திரம் 10 லட்சம் வாடகை கொடுக்க முடியாமையால் அவர்களது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்களின் பணத்தை ஆதீனத்திற்கு வழங்குவதை தவிர்க்கும்பொருட்டு ஆதீனத்திற்குரிய காணியை சுவீகரிப்பது என்றமுடிவு பிரதேச சபையினால் எடுக்கப்பட்டுள்ளதுடன், காணி சுவீகரிப்பு தொடர்பாக குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது சர்வ கட்சிகளையும் கொண்டதாக அமையப்பெற்றுள்ளது. இக்குழுவின் சிபார்சின் அடிப்படையிலேயே காணி சுவிகரிப்பு விடயங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்குழுவின் அங்கத்தவர்களாக உள்ள கட்சியொன்றின் உறுப்பினரான க.சிவராசா தனது காட்டிக்கொடுப்பினை நிறைவேற்றியுள்ளார். மக்களின் அபிவிருத்திக்கென குறித்த காணியை பெற்றுக்கொள்ள மேற்கொள்ளப்பட்ட உள்ளகத்திட்டத்தை அவர் இந்திய தூரகத்திற்கு கடிதமூலம் அறிவித்துள்ளார்.

மக்களின் நலனை கருத்தில்கொண்டு சிலர் செயற்படுகின்றபோது அரசியல் மற்றும் சுயலாபங்களுக்காக மேற்கொள்ளப்படும் இவ்வாறான காட்டிக்கொடுப்புக்கள் மிகவும் கண்டனத்திற்குரியனவாகும்.

இக்காட்டிக்கொடுப்புக்கான பின்னணி தொடர்பில் இலங்கைநெட் விசாரணைகளை மேற்கொண்டபோது, நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்திற்கு பின்னால் ஆதீனத்திற்கு சொந்தமான 10 பரப்பு காணி காணப்படுகின்றது. அக்காணியில் பலர் அத்துமீறி கடைகளை அமைத்துள்ளனர். அவ்வாறு அமைத்துள்ளவர்களில் மேற்படி காட்டிக்கொடுப்பை மேற்கொண்டுள்ள பிரதேச சபை உறுப்பினரான சிவராசாவின் மைத்துனர் பூமா டெக்ஸ் என்ற ஜவுளிக்கடை ஒன்றை நடாத்தி வருகின்றார்.

பஸ்தரிப்பு நிலையத்தை விஸ்தரிக்கும் நோக்கில் குறித்த பத்து பரப்பு காணியும் சுவிகரிக்கப்படவேண்டும் என்று பிரதேச சபையினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறித்த காணி சுவிகரிக்கப்படுமாயின், தனது மைத்துனரின் ஜவுளிக்கடையும் பறிபோகலாம் என்ற குறுகிய நோக்கத்திற்காகவே கீழ்காணப்படும் கடிதத்தை அவர் இந்திய தூதரகத்திற்கு அனுப்பியிருக்கலாம் என்று மக்கள் பேசிக்கொள்கின்றனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com