Monday, October 15, 2018

‘சொர்க்கத்தில் பேய்கள்’: யாழ்ப்பாணம் முழு அளவிலான சுதந்திரத்துக்குத் தயாரா? ரங்க ஜயசூரிய

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான சர்வதேச திரைப்பட விழா, சர்வதேச ரீதியில் பாராட்டுக்களைப் பெற்றிருந்த ஜூட் ரத்தினத்தின் “சொர்க்கத்தில் பேய்கள்” என்கிற பdemonடத்தை திரையிடாமல் நீக்கியது. அதை நீக்குவது தொடர்பான முடிவு - தமிழ் போர்க்குணத்தின் படிப்படியான ஆனால் கணிக்கக்கூடியதான சீரழிவு அதன் சொந்த குணநலன்களை குலைப்பதை நோக்கமாகக் கொண்ட ஒன்று என்று அந்தப்படம் சித்தரிக்கிறது - தெற்கில் ஒரு முடக்கப்பட்ட எதிர்வினையாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வடக்கில் நேர்மையான மற்றும் நீண்ட காலமாக திறமையான ஆர்வலர்கள் என்று நிரூபணமான ராஜன் கூல் போன்ற ஒரு சிலரைத் தவிர, பெரும்பான்மையானவர்கள் அந்தப்படத்தினை தணிக்கை செய்ததை நியாயப்படுத்த முனைந்தார்கள்.

தெற்கில் உள்ள குடியியல் ஆர்வலர்களின் மௌனம், சில நபர்கள் மற்றும் சமூகங்கள் (மற்றவர்கள் அல்ல) பாதுகாப்பான இடங்களில் இருந்துகொண்டு எச்சரிக்கை தூண்டப்பட வேண்டும் என்கிற பிரபலமான நம்பிக்கை காரணமாக இருக்கலாம். அமெரிக்க பல்கலைக்கழகங்களின் இடதுசாரி மாணவர் ஆர்வலர்கள் பல்கலைக்கழகங்களில் இருந்து நிறுத்தப்படுவதை நியாயப்படுத்தி ஜனரஞ்சக மற்றும் தேசியவாதிகளின் எதிர்ப்புக்குரல் எழுப்புவதை இந்தக்கருத்து மேற்கோள் காட்டுகிறது. இதே கருத்து, ஐரோப்பாவில் இஸ்லாமிய ஆர்வலர்கள் பொது பாதுகாப்பு நிறுவனங்களில் இருந்து தியாகிகள் முதல் புர்காஸ் வரை கண்காணிக்கப்படுவது போன்ற விஷயங்களைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பான இடத்தைக் கோருவதற்கு வழிகாட்டியுள்ளது.

ஜூட் ரத்தினத்தின் திரைப்படம் எல்.ரீ.ரீ.ஈ யிடம் இருந்த பெற்ற அறிவினை சவாலுக்கு உட்படுத்துவதால் எல்.ரீ.ரீ.ஈ யின் எச்சங்களுக்கும் மற்றும் தமிழ் தேசியவாத தரப்பைச் சேர்ந்தவர்களுக்கும் அது சங்கடத்தை ஏற்படுத்தும். தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரால் உருவாக்கப்பட்ட இந்தப் படம் முதலில் தமிழ் போர்க்குணத்தை சிங்களத் தலைமையிலான கொழும்பிலுள்ள மத்திய அரசின் அடக்குமுறைக்கு எதிரான பிரதிபலிப்பாகச் சித்தரித்து அவர்களின் உணர்வுகளை புரியவைக்கிறது. எனினும் போர்க்குணத்தை வெளிப்படுத்துகையில் எல்.ரீ.ரீ.ஈ, ஏனைய குழுக்கள் மீது தனது முக்கியத்தை கட்டவிழ்த்துவிட்டு அதன் உட்பகை மிக்க வன்முறை வெறியாட்டத்தினால் அதன்மீதுள்ள பிரியத்தை புளிப்படையச் செய்துவிடுகிறது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் தேசியவாதிகளினால் இந்த கசப்பான யதார்த்தத்தை உட்கொள்ள முடியாது. சமூகம் என்று அறியப்படுகின்ற ஒரு குழுவினரின் அழுத்தம் காரணமாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இந்தப் படத்தை திரையிடுவதில் இருந்து நீக்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அது துயரமானது. எனினும் பல வழிகளில் அதை ஓரளவு புரிந்து கொள்ளவும் கூட முடிகிறது. யாழ்ப்பாணம் ஒருபோதும் சுதந்திரத்தை வெளிப்படுத்தும் ஒரு தளமாக இருந்தது கிடையாது, போர்க்குணம் எழுச்சி பெறுவதற்கு முன்பு கூட அப்படித்தான் இருந்தது. கொழும்புடன் குறைவான மோதல் அணுகுமுறையை ஊக்குவிப்பதைக்கூட அது மாற்றுக் கருத்துக்களால் அடக்கியது. இப்போதும் அது இல்லை - அரசாங்கத்தின் பாதுகாப்பு கருவிகள் மற்றும் பிரத்தியேகமான தமிழ் தேசியவாத சிந்தனைகள் ஆகிய இரண்டினாலும் அது ஒடுக்கப்பட்டுள்ளது. உடனடியாக வரும் எதிர்காலத்தில் எப்போதும் அது சுதந்திரமாக விடுபடாது. யாழ்பாணம் ஒரு சுதந்திர சமூகமாக எழுச்சி பெறுவதை, சிதைக்கும்; பல்வேறு பரஸ்பர அரசியல் முரண்பாடுள்ள சக்திகள் வலுப்பெற்றுள்ளன.

யாழ்ப்பாணக் கருத்துப்படி உயரடுக்கினர் படிப்படியாக ஆனால் தவறில்லாமல் தமிழ் போர்க்குணத்தையும் மற்றும் மற்றவரைத் துன்புறுத்தும் எல்.ரீ.ரீ.ஈ இனது பயங்கரவாதத்தையும் மகிமைப்படுத்தும் ஒரு கலாச்சாரத்தை யாழ்ப்பாணத்தில் மீண்டும் உருவாக்கியுள்ளார்கள். எல்.ரீ.ரீ.ஈ பற்றிய ஜூட் ரத்தினத்தின் படைப்பைத் தடுத்த அதே நபர்கள், ஜூலை மாதத்தில் கரும்புலிகள் நினைவையும், நவம்பரில் மாவீரர் வாரத்தையும் மற்றும் மே மாதத்தில் இன அழிப்பு என அழைக்கப்படும் நிகழ்வையும் அனுட்டிக்கிறார்கள். எல்.ரீ.ரீ.ஈ அதே மாதிரியான ஞாபகார்த்தச் சடங்குகள் மூலமாக அதன் தியாகிகள் கலாச்சாரத்தை வளர்த்து சகலதையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது.

இரண்டாவதாக உள்ள ஒரு உறுப்பு இந்த துணை தேசியவாத கலாச்சாரம் ஏன் நிலவவேண்டும் என்பதை விளக்குகிறது: ஏனென்றால் அது மற்றைய அனைத்துப் போட்டியாளர்கள் மற்றும் நல்லறிவான சித்தாந்தங்களையும் அடக்கியாள்கிறது. இவை அனைத்துக்கும் பின்பும் எப்படி யாழ்ப்பாணம் அதன் தற்போதைய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதற்கான ஒரு சமகால உதாரணம் எங்களது அரச பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர் அரசியல். இரண்டு எதிர்க் கிளாச்சி செயற்பாடுகளினால் கொடூரமாக ஒடுக்கப்பட்டதின்; பின்பும் ஜேவிபி மற்றும் அதன் பிளவுபட்ட குழுவினர், தமது போலி இடதுசாரி வர்ணம் பூசப்பட்ட கருத்தியல் தத்துவ சித்தாந்தம் மூலமாக பல்கலைக்கழக அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக தம்மை மீள நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர். பல்கலைக்கழகங்களில் நிலவும் அனுகூலமான சூழ்நிலை பயன்படுத்தியதுடன் மற்றும் செயலற்ற பல்கலைகழக நிருவாகிகள் வன்முறை நிறைந்த இந்த அணுகுமுறையை பாராமுகமாக விட்டதினாலுமே அவர்களால் இந்தச் சாதனையை அடைய முடிந்தது.

பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் ஒரே மாதிரியாக உள்ளார்கள் என்பதினால் அது எங்கள் பல்கலைக்கழகங்களில் வெற்றி பெறவில்லை, ஆனால் மற்றவர்களுக்கு இல்லாத விசேடமான சில மனக்குறைகள் அவர்களுக்கு உள்ளது. மாறாக இந்த மயான சித்தாந்தத்தின் மாணவ ஆர்வலர்கள் அவர்களின் மாயையான மனக்குறைகள் எல்லாம் மிதக்கின்ற மற்றொரு சமாந்தரமான பிரபஞ்சத்தை மீள உருவாக்கி அதற்குள் அப்பாவிகளாகவும் மற்றும் மகிழ்ச்சியற்றவர்களாகவும் உள்ள பெரும்பான்மையினரை அதில் சிக்க வைக்கின்றனர். எல்.ரீ.ரீ.ஈ இனை நேசிக்கும் ஈழ ஆதரவாளர்களும் யாழ்ப்பாணத்தில் இதையேதான் செய்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் கருத்தை ஒடுக்கி அந்த வெற்றிடத்தை கசப்புணர்வுகளால் நிரப்புகிறார்கள்.

மூன்றாவதாக, வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டிலுமுள்ள அரசியல்வாதிகள் எப்போதுமே கடினமான நிலையை எதிர்கொள்வதை விட அதை சாந்தப்படுத்துவதே எளிதானது என்பதைக் கண்டறிந்துள்ளார்கள். பாராளுமன்ற உறுப்பினரான விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் நடக்கும் குற்றச்செயல்களை எதிர்த்துப் போராட எல்.ரீ.ரீ.ஈ இனது புத்துயிர்ப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். உயர் அளவிலான குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் வன்செயல்கள் போன்ற குற்றச்சாட்டுகள் (அவர் குறிப்பிட்டபடி) பெரும்பாலும் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் உடனடியாக மத்திய அரசை குற்றம் சாட்டுவதற்கான பாசாங்குத்தனமான நோக்கம் கொண்டவை

நான்காவதாக, அந்த சக்திகளின் இயக்கம் அரசாங்கத்தின் பதில் நடவடிக்கைகளை தூண்டுவதுடன் அதன் மூலம் சில குடியியல் சுதந்திரங்கள் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படுவதுடன் பிடியை இறுக்குவதை நோக்கமாகக் கொண்டது. (விஜயகலா மகேஸ்வரன் தனது பேச்சுக்காக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்). அரசாங்கத்தின் பதிலானது, பிரிவினைவாத உணர்வுகளுக்கு ஒரு தடுப்பு போடவேண்டியது அவசியம் என நியாயப்படுத்திய போதிலும் வட பகுதி தமிழ் மக்கள் தாங்கள் ஒடுக்கப்படுவது போன்ற உணர்வை அது எற்படுத்துகிறது. இந்த குறைகள் தேசியவாதத்துக்கு ஊக்கம் அளிப்பதுடன் தீவிரவாத தமிழ் தேசியவாதிகளின் கைகளில் விளையாடவும் செய்கிறது.

மறுபுறத்தில் சுதந்திரமான நோக்கம் கொண்ட செயற்பாடுகளை அனுமதித்தால், அதற்கு உத்தரவாதம் இல்லை, அதன் சீரழிவு தெற்கில் மற்றொரு பேருந்து குண்டுத் தாக்குதலுடன் முடிவடையும் - அல்லது கற்றலோனாவில் நடைபெற்ற பாணியிலான பயங்கரமாக இருக்கும், மற்றும் பின்னர் ஒரு ஆயுதப்போராட்டமாக வெடிக்கும்.

ஐந்தாவதாக, யாழ்ப்பாண சமூகம் அனைத்து விதமான கருத்துக்களுக்கும் தன்னைத் திறந்துவிடுகிறது மற்றும் அனைத்து விடயங்களுக்கும் நாகரிகமான விவாதங்களுக்கும் தயாராக உள்ளது என்று கருதினால், அது ஒரு தந்திரமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். “சொர்க்கத்தில் பேய்கள்” திரையிடப்படாமல் அகற்றப்பட்டது பேச்சு சுதந்திரத்திற்கு விழுந்த அடி என்று எதிர்ப்பவர்கள் சனல் 4 இனது “ஸ்ரீலங்காவின் கொலைக்களம்” ஆவணப்படத்தில் விஷயங்கள் எப்படி இட்டுக்கட்டப் பட்டிருந்தாலும் பரவாயில்லை அதனைத் திரையிடப்படுவதை அனுமதிக்கத் தயாராக இருக்கவேண்டும். அது எப்படியானாலும் அரசாங்கத்துக்கு கடினமான தெரிவையே வழங்குகிறது. அத்தகைய திரையிடல் நல்லதல்ல என்று தெற்கிலுள்ள தேசியவாதிகள் பொங்கி எழுவார்கள். ஆகவே பல்வேறு பரவலான அபிப்ராயங்களுக்கு இடமளிக்காமல் யாழ்ப்பாணத்தை திறமையாக மூடிவிடலாம், துணை தேசியவாதிகள் அதை ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கு எளிதாக செய்து தந்துள்ளார்கள் குறைந்த பட்சம் ஒரு குறுகிய காலத்துக்காவது நிலமையைச் சமாளிக்க உதவி செய்துள்ளார்கள்.

எவ்வாறாயினும் இத்தகைய நிலமைகள் நீண்ட காலத்துக்கு நாட்டுக்கு உதவாது. இது கடைசிக் காட்சியை கொண்டுவருகிறது. குடியியல் உரிமைகள் உட்பட போருக்குப் பிந்தைய மாற்றம், ஒரு மேம்பட்ட முறையில் நிருவகிக்கப்பட வேண்டும். அதன் கருத்து, அதிக சுதந்திரம் மற்றும் இடைவெளி என்பனவற்றைப் பொறுத்தவரையில் யாழ்ப்பாணத்தின் கருத்து தெரிவிப்பவர்களை அரசாங்கம்; மெதுவாகத் தட்டிக்கொடுத்து அதிகம் சமரசபாதைக்கு இழுத்து வர வேண்டும். அதே நேரம் பிரசங்கத்துக்கான சிவப்புக் கோடுகள் தெளிவாகக் காட்டப்பட வேண்டும். அதைக் கடப்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும், அது வெள்ளை வான் வடிவத்தில் இல்லாமல் அரசாங்கத்தின் சட்டபூர்வமான கரங்களைக்கொண்டு நிறைவேற்றப்பட வேண்டும்.

அந்த நேரம் வரும்வரை “சொர்க்கத்தில் பேய்கள்” படத்தை தடுப்பது யாழ்ப்பாணத்தின் சொந்த விவகாரம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com