Monday, October 15, 2018

அரைவேக்காடு என்பதை நிரூபித்தான் குதிரைக் கஜேந்திரன். வீடியோ

அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பயங்கரவாத சந்தேக நபர்களின் விடுதலை வேண்டி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் நடைபவனி சென்றனர். அவர்கள் நடைபவனியாக அனுராதபுரத்தை அடைந்தபோது, அவ்விடத்திற்கு வாகனத்தில் சென்றிருந்தார் கஜேந்திரன்.

இவர்களை முத்திக்கொண்டு அங்கு சென்றிருந்த த.தே.கூ வின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அரசு உறுதியளித்துள்ளதாக கூறி கைதிகள் மேற்கொண்டுவந்த உண்ணாநோம்பு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை கஜேந்திரன் கோஷ்டிக்கு பெரும் ஆப்பாக அமைந்திருந்தது.

மாவையின் செயற்பாட்டால் படம் தோற்றுவிட்டது என்ற ஏமாற்றத்துடன் சிறைச்சாலை வாசலில் மாணவர்கள் நின்றுகொண்டிருந்தபோது, அங்கு விரைந்த சிங்கள இளைஞர்கள் பல்கலைகழக மாணவர்களை மிரட்டியதாக செய்திகள் வெளியாகியிருந்தது.

அவர்கள் அவ்வாறு மிரட்டினார்களா? என்பதையும் என்ன பேசினார்கள் என்பதையும் இங்குள்ள காணொயில் காண முடிகின்றது.

பல்கலைகழக மாணவர்கள் அங்கு குழுமிநின்றபோது, வந்திறங்கிய பெருபாண்மையின இளைஞர்கள் இருவர், இங்கு வந்திருப்பவர்கள் புலிகள் சார்பாக வந்திருக்கின்றீர்களா? அன்றில் அரசியல் கைதிகள் சார்பாக வந்திருக்கின்றீர்களா? என்ற கேள்வியை எழுப்புகின்றனர். அவ்வேளையில் எவரும் பதிலளிக்காமல் நிற்கின்றனர். அக்கேள்வி எழுப்பப்பட்டதும், கஜேந்திரன் மாணவர்களினுள் நுழைந்து ஒழிந்து கொள்வதை காணமுடிகின்றது.

எவரும் அக்கேள்விக்கு பதிலளிக்காத நிலையில் உங்களில் யாராவது புலிகள் சார்பாக வந்திருந்தால், புலிகள் சார்பாக நீங்கள் இங்கு வந்திருப்பதில் நியாயம் இருந்தால், உங்கள் நியாயம் தொடர்பில் வாருங்கள் பேசுவோம் என்று மீண்டும் அழைத்தனர். மாணவர்கள் எவரும் முன்வராதது தொடர்பில் அக்கறை கொள்ளத்தேவையில்லை காரணம் அதற்கான தைரியத்தை அவ்விடத்தில் அவர்களால் வரவழைத்துக்கொள்ள முடியாமையை உணர்ந்து கொள்ள முடியும். ஆனால் புலிகளின் காவலன்போல் தமிழர் மத்தியில் காட்டிக்கொள்ளும் கஜேந்திரன் ஏன் பதுங்குகின்றார்?

எவரும் முன்செல்லாத நிலையில் உங்களில் அரைவேக்காடுகள் அல்லாத எவரும் இங்கிருந்தால் புலிகள் சார்பாக முன்வாருங்கள் உங்கள் தரப்பு நியாயத்தை பேசுவோம் என்று மீண்டும் காரசாரமாக அழைத்தனர். அப்போதும் யாரும் செல்லவில்லை. அவ்வாறாயின் புலிகள் சார்பாக ஒரு சாதாரண இளைஞனுடன் பேச திராணியற்று நின்ற கஜேந்திரன் உண்மையில் அரைவேக்காடு என்பதை உறுதி செய்துள்ளாரா என தற்போது மக்கள் கேட்கின்றனர்.

யாவற்றிலும் கேவலாமான விடயம் யாதெனில், அரைவேக்காடுகள்போல் துடை நடுங்க கஜேந்திரன் போன்றோர் நிற்கையில், ஊடகவியலாளன் ஒருவன் முன்வந்து, அவ்விளைஞர்களுக்கு இவர்கள் கொண்டுவந்திருக்கும் பதாதைகளை பாருங்கள் அவர்கள் அரசியல் கைதிகள் சார்பாகவே வந்திருக்கின்றனர் என விளக்குகின்றார். ஆனாலும் அவர் என்ன விளக்குகின்றார் என்பதை உணராத கஜேந்திரன் அவ்விடத்தில் ஏதாவது கைகலப்புகள் வந்துவிட்டால் அடிவாங்கநேரிடுமோ என்ற என்ற அச்சத்தில் அந்த ஊடகவியலானை அவர்களுடன் கதைக்க அனுமதிக்காமல் அழைத்துக்கொண்டு ஓடுவதற்கு தயாராகும் விதத்தையும் கஜேந்திரனின் தொடைநடுங்கும் விதத்தையும் வீடியோவில் காணலாம்.



இங்கு மேலும் குறிப்பிடவேண்டிய இழிசெயல் யாதெனில், பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள நபர்களை வைத்து அரசியல்வாதிகள் தங்கள் வாக்கு வங்கிகளை நிரப்பவே முயன்று வருகின்றனர். அந்த வரிசையில் புலிகள் கிள்ளுகின்றனர் நுள்ளுகின்றனர் என கொழும்பில் தஞ்சமைடந்திருந்த டக்ளஸ் தேவானந்தாவும் நடைபவனியில் கலந்து கொண்டிருந்தார்.


டக்ளஸ் கொழும்பில் முறித்து மூலையில் எறிந்திருந்த வீணையின் நரம்புகளை தற்போது முன்னாள் புலிகளை வைத்தே சீர் செய்துள்ளார். புனர்வாழ்விலுருந்து வெளியேறிய பயங்கரவாதிகளை தன்னுடன் அணைத்து வைத்து அரசியல் செய்யும் வங்குரோத்து பற்றி அவரை விட்டு விலகியோடியுள்ள முன்னாள் ஈபிடிபி யினர் அம்பலப்படுத்துகின்றனர். டக்ளஸ் நடைபவனியில் கலந்து கொண்டதும் அனுராத புரத்திலிருந்து பயங்கவாதிகள் வெளியேறினால் அவர்களில் ஓரிருவரையாவது பிடித்துச்சென்று சிறிதர் தியேட்டரில் அடைக்க முடியும் என்ற நப்பாசையிலே அன்றி வேறேதுமாக இருக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

புலிகளுக்கு பயந்து தங்களை பாதுபாப்புக்கு வைத்திருந்த டக்ளஸ் தேவானந்தால், தற்போது புலிகளை ஈபிடிபி யில் இணைத்துக்கொள்கின்றபோது அவ்வியக்கத்தில் தங்களால் இயங்கமுடியாது என பலர் வெளியேறியுள்ளமை இங்கு மேலும் சுட்டிக்காட்டவேண்டியதாகும்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com