Wednesday, October 24, 2018

வெடிபொருட்களுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது!

மொரகொட, நபடவெவ பகுதியில் கைக்குண்டு ஒன்று மற்றும் வெடிபொருட்களை வைத்திருந்த பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அநுராதபுரம் விஷேட பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போதே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேக நபர்களிடம் இருந்து 2 கைக்குண்டுகள், மின்சார டெடனேடர் 21, வோட்டர் ஜெல் 18, தோட்டக்கள் 17 மற்றும் 2 கத்திகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மொரகொட, தலாவ பகுதியை சேர்ந்த 38 வயதுடைய பெண் ஒருவரும் 29 வயதுடைய ஆண் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் விஷேட பொலிஸ் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com