Sunday, October 7, 2018

பொலிஸ் காவலிலிருந்த இராணுவ கொமாண்டோ படையைச் சேர்ந்தவர் ஆற்றினுள் குதிச்சிட்டாராம்.

கட்டானை பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முன்னாள் இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்த நபர் ஆற்றினுள் குதித்து மரணடைந்து விட்டார் என பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

பொலிஸ் நிலையத்திலிருந்து குற்றச்சம்பவம் ஒன்று தொடர்பான விசாரணைக்கு அழைத்துச் செல்கையில், தடுகம்ஓயா விற்கு அண்மையில் சிறுநீர் கழிப்பதற்கு அனுமதி கேட்ட சந்தேக நபர் , அவ்வாறு அனுமதிக்கப்பட்டபோது, பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கி வீழ்த்திவிட்டு ஆற்றினுள் குதித்துள்ளதாக கூறுகின்றனர் பொலிஸார்.

ஆற்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ள சந்தேக நபரின் உடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் பாதாள குழுவொன்றின் முன்னணி உறுப்பினர் என்பதுடன் இவர் இலங்கையில் இடம்பெற்ற பல்வேறு கொலை, கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரியவருகின்றது.

கட்டானை பகுதியில் கடந்த மாதம் 30ம் திகதி கார் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை சுட்டுக்கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இவர், கைது செய்யப்படும்போது ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com