Thursday, October 11, 2018

புதுக்குடியிருப்பில் சிறுவன் மீது சூடு! அலேர்ஜியாம் என்கிறது மட்டு வைத்தியாசாலை! அதிகாரவர்க்கம் பின்னணியில்!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் சிறுவன் ஒருவன் மீது வளர்ப்பு தாயால் சூடுவைக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. குறித்த சிறுவன் தொடர்ச்சியாக சித்திரவதைக்கப்படுவதை உணர்ந்த அயலவர்கள் சிறுவர் குற்றத் தடுப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியதையடுத்து, அங்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த சிறுவர் குற்றப் தடுப்பு பொலிஸார் சிறுவனை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் கடந்த மூன்று நாட்களாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 33 இலக்க வார்ட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக வளர்ப்பு தாயாரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டபோது, சிறுவனுக்கு தக்காளிப்பழம் ஒவ்வாமையால் தடித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இக்கொடுஞ்செயலுக்கு மட்டக்களப்பு வைத்தியசாலையை சேர்ந்த வைத்தியர்கள் துணைபோவதாகவும், அவர்கள் சிறுவனது உடலிலுள்ள காயங்கள் ஒவ்வாமை காரணமாக ஏற்பட்டுள்ளதாக வைத்திய அறிக்கை வழங்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேநேரம், குறித்த பெண்ணின் உறவினர் ஒருவர் பொலிஸ் திணைக்கத்தைச் சேர்ந்தவர் என்றும் உறவினர்கள் மட்டக்களப்பில் பல்வேறு அரச நிறுவனங்களில் உள்ளனர் என்றும் தெரியவருகின்றது. மேலும் அப்பெண் ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணேஷராஜாவின் உறவினர் என்றும் இவ்வாறான பின்னணியில் சிறுவனுக்கு நீதி கிடைப்பது கடினமான விடயம் என்றும் ஊரவர்கள் கவலை கொண்டுள்ளனர்.

மட்டக்களப்பிலே அரசியல் கூட்டு அமைப்பதற்கு சில வக்கீல்கள் முனைந்து வருகின்றனர். அதற்கு அவர்கள் கூறும் காரணம் சமூக அக்கறையாம். அவ்வாறாயின் எமது சமூகத்தை சேர்ந்த இச்சிறுவனுக்கான நீதியை குறித்த வக்கீல்கள் உறுதி செய்வார்களா?



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com