Thursday, October 11, 2018

வன்னி மக்களுக்கு உதவி கோரி ஐக்கிய அரபு ராஜ்யம் சென்ற கேணல் ரட்ணபிரிய பந்து. புலம்பெயர் புலிகளுக்கு செருப்படி!

வன்னியில் சிவில் பாதுகாப்பு பிரிவின் தளபதியாகவிருந்து வன்னி மக்களின் மனங்களில் இடம்பிடித்திருந்தவர் கேணல் ரட்ணபிரிய பந்து. இவரது சேவையை பாராட்டும்பொருட்டு உலக இலங்கையர் பேரவையினர் ஐக்கிய அரபு ராஜ்யத்திற்கு அழைத்திருந்தனர்.

பேரவையினரின் அழைப்பை ஏற்று மூன்று நாள் விஜயம் ஒன்றினை மேற்கொண்டு அங்கு சென்ற ரட்ணபிரிய பந்துவிற்கு பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஐக்கிய ராஜ்சியத்திலுள்ள இலங்கையைச் சேர்ந்த பெரும்திரளான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அம்மக்கள் மத்தியில் பேசிய அவர், வன்னி மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் தெளிவாக எடுத்துரைத்துள்ளார். அரசியல்வாதிகளின் செயற்பாடுகளால் வன்னி மக்களுக்கு எவ்வித ஆறுதல்களுகம் கிடைக்கப்போவதில்லை என்பதை உணர்த்திய அவர், அங்குள்ள மக்கள் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவர்களாக காணப்படுகன்றனர் என்றும் அதற்கான பிரதான காரணம் தொழில் பற்றாக்குறையே என்றும் எடுத்தியம்பியுள்ளதுடன் வன்னியில் தொழில்வாய்ப்புக்களை உருவாக்க ஜாதி மத பேதமின்றி அனைவரும் முன்வரவேண்டும் என்ற வேண்டுதலை விடுத்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கேணல் ரத்னபிரிய பந்து:

நான் சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாளராக கடமையேற்றுச் சென்றபோது என்மீது பாரிய பொறுப்பு ஒன்று சுமத்தப்பட்டிருந்தது. அப்பொறுப்பானது சிவில் பாதுகாப்பு பிரிவிற்கு தமிழ் இளைஞர் யுவதிகளை சேர்த்துக்கொள்வது. அக்காரியத்தை நான் கஸ்ரோ பேஸ் இலிருந்து ஆரம்பித்தேன். கஸ்ரோ பேஸ் என்பது உயிரிழந்து புலிகளின் தளபதி ஒருவரின் பெயரிடப்பட்ட தளம். அங்கே தற்காலிக குடிசைகளை அமைத்து பணியை தொடர்ந்தோம்.

அன்றுவரை ஒருவரைக்கூட சேர்த்துக்கொள்ள முடியாதிருந்த வன்னிப்பிரதேசத்தில் 5 நாட்களில் 20 பேரை நான் இணைத்துக்கொண்டேன். அவர்களில் சிலர் புலிகளின் முன்னணி தளபதிகளாகவும் இருந்தனர். அவர்களில் புலிகளின் மாவீரர் துயிலும் இல்லங்கள் தொடர்பான பிரிவில் செயற்பட்டவர்கள், சார்ல்ஸ் அன்ரனி படையணியைச் சேர்ந்தவர்கள், புலிகளின் காவற்படையை சேர்ந்தவர் என்போரும் அடங்கினர். இவர்கள் அனைவரும் என்னுடன் இணையும்போது மிகுந்த சந்தேகத்துடனேயே இணைந்தனர். நான் அங்கு என்ன செய்யப்போகின்றேன் என்பது அவர்களுக்கு தெரியாது. அத்தருணத்தில் சமூகத்தில் பரப்பப்பட்டிருந்த வதந்திகள் பாரதூரமானவை. இவ்வாறான சூழ்நிலையில் அவர்கள் தொடர்பில் எனக்கும் என் தொடர்பில் அவர்களுக்கும் நியாயமான சந்தேகங்கள் இருக்கவே செய்தது.

இந்நிலையில் எனக்கு எமது தரப்பிலிருந்தும் சவால்கள் விடுக்கப்பட்டது. முடிந்தால் 100 பேரை இணைத்துக்காட்டுமாறு அந்த சவால்கள் அமைந்திருந்தது. ஆனால் நான் அவர்களுக்கு சவால் விடுக்க செல்லவில்லை. எனது இலக்கை நோக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்தேன். இன்றுவரை 4000 பேரை இணைத்து அவர்களுக்கு தொழில்வாய்பினை ஏற்படுத்திக்கொடுத்தேன். 15000 பேர் காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். அவர்கள் மூன்று முறை தங்களையும் இணைத்துக்கொள்ளுமாறு ஆர்ப்பாட்டங்களை செய்துள்ளனர். வடமாகாணத்திலே அதிக தொழில் வாய்பினை வழங்கிய அரச நிறுவனமாக சிவில் பாதுகாப்பு திணைக்களம் விளங்குகின்றது.

சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்ன செய்துள்ளது என்ற கேள்வியை நீங்கள் கேட்கலாம். நாம் அதிகமாக விவசாய நடடிவக்கையில் இறங்கினோம். அதற்காக நாம் அரச காணிகளையே தேர்ந்தெடுத்தோம். அவ்வாறன சந்தர்ப்பங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்தோம். நாங்கள் ஏதாவது ஒரு காணியை எடுக்கின்றபோது, ஏதோ ஒரு தரப்பின் தூண்டுதலின் பேரில் எதிர்ப்பார்ப்பாட்டம் வரும் அல்லது எவரோ ஒருவர் வருவார் இது எனது காணி எனக்கூறிக்கொண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நாங்கள் அவர்களுடன் இது அரச காணி என முரண்படச் செல்லவில்லை. உடனடியாக இதோ வைத்துக்கொள்ளுங்கள் நாங்கள் வேறு இடம்செல்லுகின்றோம் என வேறு இடங்களுக்குச சென்றோம். அதுவே எங்கள் வளர்சிக்கு காரணமாக இருந்தது நாம் அன்று அவர்களுடன் முரண்பட்டுகொண்டிருந்தால் அந்த முரண்பாடு இன்றுவரை நீடித்திருக்கும். ஆனால் இறுதியாக அந்த மக்கள் உணர்ந்து கொண்டார்கள் எனது நோக்கம் யாது என்பதை.

புலம்பெயர் தேசத்து மக்களிடம் போராட்டத்தின் பெயரால் சேகரித்த பணத்தை, புலம்பெயர் புலிகள் பதுக்கி வைத்துள்ள இச்சந்தர்ப்பத்தில், புலிகளுடன் போரில் ஈடுபட்ட ஒருவர் வன்னி மக்களுக்காக உதவி கோரியுள்ளார். இது புலம்பெயர் புலிகளின் தலையில் விழுந்துள்ள பெரு இடியாகும்.

வடமாகாண சபை மாகாணத்தை அபிவிருத்தி செய்து தொழில்வாய்ப்புக்களை உருவாக்குவதற்காக மத்திய அரசு ஒதுக்கிய பணத்தை மீண்டும் திறைசேரிக்கு அனுப்பி மக்களை மேலும் வறுமைக்குள் தள்ளியுள்ள நிலையில் கேணல் ரத்னபிரயபந்து, வன்னி மக்களின் மேம்பாட்டுக்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவது தமிழ் மக்களின் வாக்கில் சீவியம் நடாத்தும் அரசியல்வாதிகளுக்கு அவமானமாகும்-










1 comments :

Unknown October 12, 2018 at 6:27 AM  

Col. Rathnapriya has proved all of us what is the real reconciliation. After going through an untold hardship people in North and East are looking for right to live. Col. Rathnapriya has facilitate them and showed them the way to stand on their own which the regional Tamil administration failed to do. In fact Tamil administration does not have a will to do so. This is a proof to show the world and the genuine solution seekers that the solution is not the separatism but to provide the basics for their economic, cultural and social needs.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com