Sunday, September 23, 2018

றிசாட்டின் காடழிப்பினால் வில்பத்து வனத்திலுள்ள குளங்கள் வற்றுகின்றது. விலங்கினங்களின் உயிருக்கு ஆபத்து.

வில்பத்து வனப்பிரதேசத்திலுள்ள செயற்கைக்குளங்கள் பலவற்றின் நீர் வற்றிவருதாகவும், இதற்கான காரணம் அமைச்சர் றிசாட்டினால் மேற்கொள்ளப்பட்ட காடழிப்பே என சிங்கள இணையத்தளம் ஒன்று சாடியுள்ளது.

குறித்த செய்தியில், வனப்பிரதேசத்தில் 42 இரண்டு நீர் தேங்கு நிலைகள் உள்ளதாகவும் அவற்றில் 20 பலமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வில்பத்து பூங்காவின் வின் முகாமையாளர் சம்பத் லக்ஸ்மன் பெரேரா தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மஹிந்த அரசின் செல்லப்பிள்ளையாகவிருந்து வில்பத்து பிரதேசத்தில் முஸ்லிம் மக்களை குடியேற்றுவதற்கென றிசாட் பதுயூதீன் லட்சக்கணக்கான ஏக்கர் காணிகளை பெற்றுக்கொண்டார் என்பது யாவரும் அறிந்தது.

குறித்த காணி விடயத்தில் றிசாட் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியிருப்பதும் விடயம் நீதிமன்றவரை சென்றிருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com