Friday, September 28, 2018

ஜெனிவாவில் சிறிதரன் போட்டோ சூட்டிங்! புலிசார்பு அமைப்புக்கள் குற்றச்சாட்டு!

கடந்த 15 ம் திகதி ஆரம்பமான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அமர்வுகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது. இந்நிலையில் நேற்று ஜெனிவா சென்றிருந்த தமிழரசுக்கட்சியின் சி.சிறிதரன் ஐ.நா மனித உரிமைகள் பேரவை வளாகத்திற்கு சென்றிருந்தார். அவருடன் தமிழ் வின் செய்தியாளர் அணியொன்றும் சென்றிருந்ததென்றும் அவர்கள் சிறிதரனை ஐ.நா வின் பல இடங்களில் நிறுத்தி புகைப்படம் எடுத்து, லொக்கேஷன் மாற்றி மாற்றி பேட்டிகள் எடுத்ததையும் அவதானிக்க கூடியதாக இருந்தாக அங்கிருந்து வரும் இணையச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜெனிவாவில் ஐ.நா வளாகத்தினுள் நின்றுகொண்டிருக்கின்ற புலிகள் சார்பு அமைப்புக்கள் சிறிதரனின் மேற்படி விடயத்தை மிகவும் கண்டிக்கின்றனர். சிறிதரன் தேர் பார்க்கச் சென்றதாக கேலி செய்கின்றனர்.

சிறிதரன் தொடர்பான விமர்சனத்தில் , ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான பக்க விவாதங்கள் 15ம் திகியிலிருந்து நடந்து வருகிறது. அங்குதான் இலங்கை அரசு கடுமையான வேலை செய்து, புலிகள் தொடர்பான அப்பிராய மாற்றத்திற்கு முயன்று வருகிறது. இப்பொழுது பக்க நிகழ்வுகள் அனைத்தும் முடிந்து விட்டது. ஆரம்பத்திலேயே பேரவைக்கு வந்து, பக்க நிகழ்வுகளில் பங்குபற்றியிருக்க வேண்டியவர் சிறிதரன். அப்படி ஏதாவது செய்தால்தான், அபிப்பிராய மாற்றங்களை செய்யலாம்.

பக்க நிகழ்வுகள் முடிந்த பின்னர், புகைப்படகாரர்கள் சூழ வந்து, புகைப்படம் எடுத்து விட்டு சென்றால் எந்த அபிப்ராய மாற்றமும் நிகழாது.

சிறிதரன் இன்று ஐ.நாவிற்கு வந்தபோது, பக்க நிகழ்வுகள் முடிந்து விட்டன. இலங்கை விவகாரங்கள் எங்குமே பேசப்படவில்லை.

ஒருவேளை மக்காவிற்கு தரிசனம் செல்வது போல, ஐ.நா வளாகத்தில் கால் வைத்து விட்டு திரும்பலாமென அவர் நினைத்திருப்பாரோ? எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐ.நா வினுள் நுழைந்த சிறிதரன் அங்கு நின்ற வெள்ளைத்தோலுள்ளவர்கள் யாராக இருந்தாலும் வினயமாக வேண்டி அவர்களுடன் படம் பிடித்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com