Sunday, February 18, 2018

இனப்பிரசனையை தீர்க்க சுலபமான படி முறைகள். சிவா குருபரன்

வெளிநாட்டு தமிழருக்கு தொடர்ந்து தடையை வைத்த படி அவர்களை தமிழீழம் என்று கூவுதலை தூண்டுதல்.

இலங்கையில் முன்னாள் போராளிகள் மற்றும் ஏனையோருக்கு தனித்தனியே புலிகளின் ஒவ்வொரு கொள்ளகையை முன்னிறுத்தி ஒவ்வொரு அரசியல் கட்சிகளை பதிவு செய்தல்.

பழைய அரசியல் கட்சிகளுக்கும் அவர்களுடைய கோரிக்கைகளுடனேயே வைத்திருத்தல்.

ஒவ்வொரு கட்சிகளுக்கும் அல்லது ஒவ்வொரு கூட்டமைப்பிலும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினர்களை மட்டும் பாராளுமன்றம் வருமாறு பார்த்துக்கொள்ளல்.

ஒவ்வொரு தனிக்கட்சிகளுக்குமிடையே அல்லது ஒவ்வொரு கூட்டமைப்புக்கிமிடையே கருத்தொற்றுமை ஏற்பட்டுவிடாமல் பார்த்துக்கொள்ளல்.

பாராளுமன்றம் வந்தவர்களையும் ஒவ்வொரு தனிக் கட்சிகளையும் தமிழ்த் தேசியத்துக்கு எதிராக செயலாற்ற வைத்து அவற்றின் ஆதாரங்களை இரகசியமாக பதிவு செய்து வைத்தல்.

கருத்தொற்றுமை வந்து அவர்கள் சேரும் நிலை வரும் தருணங்களில் ஒவொருவரும் செய்த பிழைகளை மக்களிடையே கசியவிடுதல்.
ஒவ்வொரு பிரிவினை சதிகளை அல்லது பதவி விடயங்களை சலுகைகளை ஒருவருக்கு மட்டும் கொடுத்து சேரவிடாமல் பார்த்துக்கொள்ளல்.

அடிமட்ட மக்களிடையே தென்னிந்திய சினிமாவை போதியளவில் எடுத்துச் செல்லல்.

கல்வியை சாதாரண தரம் கூட அடைய முடியாதளவு கலாசார சீர்கேடுகள் போதைப்பாவனைகள் நவீன விடயங்கள் என்ற போர்வையில் புகுத்தி கல்வியை சிதறடிப்பதன் மூலம் சிந்திக்கும் திறனை அழித்தல்.

குறைந்த வயதில் பணத்தில் ஈர்ப்பை ஏற்படுத்தி சிறிய கூலிக்கு பெரியளவு வேலைவாய்ப்புக்களை ஏற்படுதல்.

அவர்கள் உழைக்கும் பணத்தை ஆடம்பர செலவுகளை சினிமா மூலம் சமூக வலைத்தளங்கள் மூலம் புகுத்தி மீண்டும் ஒரே நிறுவன வியாபார நிலையங்கள் மூலம் புடுங்குதல்.

இளையோர்களை ஒவ்வொரு அரசியல் கட்சிகளுக்கும் அடியாட்களாக மாற்றுதல்.

முற்றுமுழுதாக கல்வி மற்றும் ஏனைய முன்னேற்றகரமான சிந்தனைகளை தோன்றவிடாது கவனக் கலைப்பான்களை தொடர்ந்து செலுத்துதல்.

ஏழைகுடும்பங்களை ஒவ்வொரு மதத்திலுமிருந்து வேற்று மதத்துக்கு வீடு உணவு ஆடம்பரம் கவர்ச்சி பேச்சுக்கள் மூலம் மாற்றுதல்.

சம நேரத்தில் நாகரிகம் உலக வளர்ச்சி நவீனம் என்ற போர்வையில் இனக்கலப்பை காதல் மூலமும் வசதி வாய்ப்பு ஏழ்மையை போக்கவும் தந்திரமாக இனிமையான வழிகளில் நிறைவேற்றல்.

இவ்வளவு செயன்முறைகளை தாண்டியும் கற்றோர் எவராவது இருந்தால் அவர்களை புலமை பரிசில் மேற்படிப்பு தகுதி சார் புலம் பெயரல் போன்றவற்றால் வெளியக்கற்றல்.

காலப்போக்கில் பிரிவினை மூலம் தமிழ் கட்சிகளை சிதைத்து ஆட்சியாளரால் உருவாக்கப்பட்ட விசுவாசித் தமிழர்களை வைத்து ஆட்சியாளர்களின் கட்சிகளை சலுகைகள் மற்றும் ஏனைய கவர்ச்சிகள் வெகுமதிகள் மூலம் மக்களை ஆட்சியாளர் கட்சிகளை நோக்கி கவருத்தல்.

ஒவ்வொரு படிமுறைகளையும் கிராம மட்டதில் விடுதலைப்புலிகளின் கொள்கைகளை முன்னிறுத்தி கிராம மட்டத்தில் போலி role model களை உருவாக்கி முகமூடியாக்கி மக்களுக்கு விருப்பத்துக்குரிய கோசமான தனி நாடு சமஸ்டி என்ற தொனிகளோடு நிறைவேற்றல்.

இந்த படிமுறையில் செயலாற்றினால் இன்னும் 20-25 வருடங்களில் இலங்கையில் தமிழ் மக்களுக்கு நாடு தேசியம் என்ற கொள்கைகள் கோரிக்கைகள் இல்லாமல் போய்விடும்.

வெளிநாடுகளில் தற்போது வாழும் ஈழத்தமிழர்கள் இன்னும் 25வருடங்களில் சரிபாதியாக குறைந்துவிடுவர்.

அவர்களின் பிள்ளைகள் வாழும் ஒவ்வொரு நாட்டு கலாசாரம் நாகரிகம் சொந்த வாழ்வில் நாட்டம் கொண்டு அங்கே ஊறிவிடுவதால் அவர்களுக்கு தனிநாடு தேசியம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும். அப்படி இருந்தாலும் தாங்கள் வாழும் நாட்டு மொழிகளில் புத்தகங்களை எழுதி மகிழ்ந்து படித்து பெருமைப்பட்டு இருப்பர்.

மேற் கூறிய அனைத்தும் கோவம் கொள்ள அல்ல... எங்கள் இனம் காணமல் போய்க் கொண்டிருக்கும் வழிமுறைகளின் நிகழ் கால உதாரணங்கள்.

நான் தமிழர்க்கு எதிர்தரப்பாக இருந்தால் இதனை சுலபமாக செய்து முடிப்பேன். காரணம் இலங்கை தமிழினத்தில் இவ்வளவும் கொண்டு செல்வது மிக சுலபம். ஒற்றுமையில்லாதவர்கள், இலகுவாக இடம்மாறக் கூடியவர்கள். வேற்றுக் கோசத்தோடு மன அமைதி கொண்டு மகிழ்ந்திருப்பவர்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com