Sunday, June 12, 2016

பா.உ அங்கஜன் இராமநாதன் 10.06.2016 அன்று பாராளுமன்றத்தில்.. ஆற்றிய உரை முழுமையாக

கௌரவ சபாநாயகர் அவர்களே :-

வடக்குக் கிழக்கு மக்கள் முகம் கொடுத்து வரும் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்கு நேரத்தை ஒதுக்கி தந்தமைக்கு எனது நன்றிகள். நான் யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் பிரதிநித்துவப்படுத்துகின்றேன். ஏனைய மாவட்டங்களை போன்று இந்த மாவட்டங்களிலும் மக்கள் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வந்தாலும் இவர்களின் பிரச்சனைகள் சற்று தனித்துவமானவை. காரணம் 30 வருட யுத்தித்தினால் இவர்களின் சாதாரணவாழ்கை மற்றும் வாழ்வாதாரங்கள் சேதமடைந்தமையால் ஆகும். போருக்கு பின்னர் எமது சாதாரண வாழ்க்கைக்கு திரும்புவதற்கு மிகக் கஷ்டப்பட்டு 3 தசாப்த போரினால் பல கோடிக்கணக்கான, கசப்பான அனுபவங்களை மறந்து எமது மக்கள் சமாதானத்தையும் சுதந்திரத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள். நாம் எல்லோரும் ஒன்றிணைந்து சம்மதித்து நடவடிக்கைகள் எடுப்பதன் மூலம் தான் இதனை நாம் அடைய முடியும். நான் வடக்கில் இருந்து வந்து சில விசேட பிரச்சனைகளை அதாவது வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்து வரும் பிரச்சனைகளை நான் கையாள்வதால் அவர்களுக்கு சில பிரச்சனைகள் உண்டு எனவும் அவை தீர்க்கப்பட வேண்டும் எனவும் உணர்கின்றேன். இம் மக்கள் சாதாரண நிலைக்கு திரும்புவதற்கு உதவுவது மட்டுமல்லாமல் அவர்களின் பிரச்சனைகளை இனம் கண்டு அவற்றைத் தீர்த்துவைக்க வேண்டும் என நம்புகின்றேன்.

உள்ளுரில் இடம்பெயர்ந்த மக்களின் மீள் குடியேற்றமே மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் பிரச்சனையாகும் 3 தசாப்த காலமாக பெரும்பாலான வடக்குக் கிழக்கு மக்கள் இடம்பெயர்ந்து நலன்புரி முகாம்களிலும் சிலர் வாடகை வீடுகளிலும் உறவினர்களுடனும் வாழ்ந்து வருகின்றனர். கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் அல்ல 30 வருடங்களாக இடம்பெயர்ந்த மக்களே இவர்கள். ஏறக்குறைய 1300 குடும்பங்கள் இன்னமும் சரியான வீடுகளிலோ சிறந்த சுகாதார வசதிகள் மற்றும் வழ்வாதரங்களுடனோ வாழ்ந்து வரவில்லை, இவர்களில் பெரும்பாலனவர்கள் கரையோர மக்கள். இவர்களின் வாழ்வாதாரம் மீன்பிடித் தொழில் நீண்ட 30 வருடங்களாக நலன்புரி முகாம்களில் வாழ்ந்து வருவதால் இவர்களின் தரம் மற்றும் தராதரம் என்பன குறைந்து கொண்டே போகின்றது.

கௌரவ சபாநாயகர் அவர்களே…….!

யாழ்மாவட்டத்தில் ஆரம்பத்தில் உயர் பாதுகாப்பு வலயமாக 27259.31 ஏக்கர் காணியில் 2009ல் இருந்து 20408.40 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டு மீதியாக 6850.91 ஏக்கர் காணி மட்டுமே விடுவிக்கவேண்டியுள்ளது. இது யாழ்மாவட்டத்தின் காணி தொகையில் அண்ணளவாக 2.36 வீதமாகும். இந்த 2.36 வீத காணியும் 9680 காணிச் சொந்தக்காறருக்கு திருப்பி கொடுக்கப்பட வேண்டியவை இவை அரச காணிகள் அல்ல.
ஆயினும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் பாதுகாப்புப் படையினரும் 2015ம் ஆண்டில் இருந்து இந்த முயற்சியை துரிதப்படுத்தி வருவதற்கு நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளேன். கடந்த டிசெம்பர் மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது நலன்புரி முகாமில் உள்ள எமது மக்களை காண்பித்த போது அதனை பார்த்த அதிமேதகு ஜனாதிபதி 6 மாதங்களுக்குள் இவர்கள் மீள் குடியேற்றப்படுவர் என நம்பிக்கை தெரிவித்தார். புதிய நம்பிக்கை ஒளி இவர்கள் மனதில் எழுந்து ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். ஏற்கனவே ஜனாதிபதி அவர்கள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளர் எனவும் விரைவில் இதனை மக்களுக்கு தெரியப்படுத்துவார் என்பதில் மகிழ்ச்சி அடைக்றேன். மீள்குடியேற்றம் முடிக்கும் போது வடக்கு கிழக்கில் உள்ள பாதுகாப்பு படையினரின் எண்ணிக்கை அங்கு வாழ்ந்து வரும் மக்களுடன் ஒப்பிடும் போது மிக அதிகம். அண்மையில். சலாவ முகாமில் ஏற்பட்ட துக்ககரமான நிகழ்வினைக் கேட்டு நானும் எனது மக்களும் மிகவும் மனவருத்தம் அடைந்ததோடு இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எனது ஆழ்ந்த அனுதாபத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.

வடக்குக் கிழக்கில் இத்தகையதோர் சந்தர்ப்பம் ஏற்பட்டால் ஏற்படும் விளைவு மிகப் பாரதூரமானதாகவும் தாங்கிக்கொள்ள முடியாத்ததாகவும் இருக்கும். நான் தயவாகக் கேட்டு கொள்வது யாதெனில் வடக்குக் கிழக்கில் மட்டுமல்லாது வேறு எந்த பிரதேசத்திலும் மக்களுக்கு அபாயம் விளைவிக்கக்கூடிய பாதிப்பினை ஏற்படுத்தக் கூடிய அனைத்து போர்க் கருவிகளையும் அகற்றிவிடும்படியாகும்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை மீள் நிலைமைக்கு கொண்டுவருவதற்கு அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரில் விசேட கவனம் செலுத்த வேண்டும். படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் இது மந்தகதியாகவே காணப்படுகிறது. இதனை துரிதப்படுத்த வேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனிதவிமான ரீதியில் பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்.
கரையோர மக்கள் தங்கள் தெரிவிற்கேற்ப தமது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். எமது வளங்களை இந்திய மீனவர்கள் சுறண்டுவதாலும் எதிர்கால எமது வளங்களை நாசப்படுத்துவதாலும் அவர்களின் வாழ்வாதாரம் பயங்கரமாக உள்ளது. ஆயினும் எமது அரசாங்கம் முன்னைய காலத்துடன் ஒப்பிடும் போது ஓரளவிற்கு குறைத்து வந்திருந்தாலும் மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்து வரும் இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மீனவசமாசங்கள் தம் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் தமது பிள்ளைகளின் கல்வியை முன்னேற்றுவதற்கும் ஊக்கப்படுத்தபட வேண்டும்.

கெளரவ பிரதம மந்திரி அவர்கள் எதிர்காலத்தில் 10 லட்சம் தொழில் வாய்ப்புக்களை எற்படுத்தித் தருவதாக இளைஞர்களுக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இதில் கணிசமான சதவிகிதத்தினை புனர்வாழ்வு அளிக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட இளைஞர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

கெளரவ சபாநாயகர் அவர்களே :-

எதிர்காலத்தை வழமைக்கு திருப்பி தேசிய பாதுகாப்பினை உறுதி செய்வதோடு அவர்களின் பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரச வேலை வாய்ப்புக்கள், தனியார் தொழில் வாய்ப்புக்கள் அல்லது சுயதொழில் ஏற்படுத்திக் கொடுத்தல் போன்ற சந்தர்பங்களை முன்னைநாள் L T T E உறுப்பினர்கள் மற்றும் போரினால் விதவியாக்கப்பட்டவர்களை அரச தொழில் வாய்ப்பு நிகழ்சித்திட்டத்தில் உள்வாங்குவதன் மூலம் இது ஏற்படும்.

சிவில்சமூகம் மற்றும் தனியார்துறையினரும் வடக்குக் கிழக்கு மக்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்துவதற்கு அவர்களையும் ஊக்கப்படுத்த வேண்டும்புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள், விதவைகள், மற்றும் அநாதைகளின் பிரச்சனைகளும் மிகப்பரதூரமானவை. இந்த மாவட்டங்களில் வேலைத்திட்டங்கள் ஏற்படுத்தப்படும்போது இவர்களின் வாழ்வாதாரம் முன்னுரிமைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த மாவட்டங்களில் காணப்படும் மொத்த வெற்றிடங்களை கணக்கில் எடுத்து ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிட்டு ஏதாவது வித்தியாசம் காணப்பட்டால் அவற்றை ஏனைய மாவட்டங்களுடன் சரிசெய்யப்பட வேண்டும். ஆனால் வடக்குக் கிழக்கில் வேலைவாய்ப்பின்மை வீதம் உயர்ந்து கொண்டிருக்கின்றது தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சனையை முடிவுறுத்தலாம்.

அண்மைக்காலங்களில் சரியான வழிகாட்டல் இல்லது பெருந்தொகையான இளைஞர்கள் சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதை கண்கின்றோம். இந்த வெற்றிடங்கள் இந்த இளைஞர்கள் மூலம் நிரப்பிவிடுவோமாயின் விசேடமாக யாழ்ப்பாணத்தில் ஏற்படும் பிரச்சனைகள் நிச்சயம் விலகிவிடும். வடக்கு மக்களுக்குப் போதைபொருள் பாவனை பெரும் தொல்லையாக கணப்படுகின்றது. இளைஞர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்புக்களும், பொருத்தமான வாழ்க்கை எண்ணங்களும் இருக்குமாயின் இது இலகுவில் தீர்ந்துவிடும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே…. !

வடக்கு மக்களின் முக்கிய வருமானமூலமாக விவசாயம் நீண்ட காலமாக காணப்படுகின்றது. சேதனஉரங்களை பாவிப்பதோடு பூச்சிக்கொல்லி மருந்துகளையும் இரசாயனப் பொருட்களையும் பாவிக்கவேண்டாமென விவசயிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பல மக்கள் விவசாயத்தை நாடிச்செல்கின்றனர். ஒரு சிறிய அளவு அரசாங்க ஊக்குவிப்புக்கள் கூட படித்த இளைஞர்களை விவசாய நாட்டத்திற்குள் செலுத்தி விடும்
ஆயினும் புகையிலை செய்கை எதிர்காலத்தில் தடை செய்யப்பட இருப்பதால் அவர்களுக்கு மாற்று பயிர்ச் செய்கையை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அதே போல் எமது உருளைகிழங்கு அறுவடை செய்யும் காலங்களில் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இருக்குமதி செய்யும் போது எமது சந்தை வாய்ப்பு அருகி விடுகின்றது. சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு இது ஏற்கனவே தெரியப்படுத்தி இருந்தும் கூட இந்த உற்பத்திகளுக்கான வரி அதிகரிப்பு கடந்த காலங்களில் இருந்துகொண்டே இருக்கின்றது. இந்த உற்பத்திகளை பாதுகாத்து வைப்தற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் தாண்டிகுளம் பொருளாதர மத்திய நிலையம் சகல மாகாண விவசாயிகளுக்கும் தமது உற்பத்தியினை சந்தைபடுத்துவதற்கும் வாய்ப்பளிப்பதோடு பயிர்ச்செய்கைபண்ணப்படாத நிலங்களும் பாவிக்க்கப்படும் நிலைஏற்படும். இது அதி மேதகு ஜனாதிபதியின் திட்டமும் ஆகும். இதே விவசாயப் புரட்ச்சியை முன்னரும் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது. இதே புரட்சியை அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் மேற்கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணக்குடாநாட்டில் பெரிய நீர் விநியோக அபிவிருத்திகள் எதுவும் காணப்படவில்லை. மணல்ப்பாங்கான தரைகளில் அமைக்கப்பட்ட மலசலக் கான்கள், கிணறுகள் மற்றும் குடிநீர் நிலைகள் காணப்படுகின்றன. நிலத்தடி நீர் இதனால் மாசடைந்து நச்சு தன்மை அடைகின்றது.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

இந்த மக்களின் பிரச்சனைகள் பற்றி நான் அறிந்தவற்றை தங்கள் கவனத்திற்கு கொண்டு வரும் போது மீள் குடியேற்றத்தை துரிதப்படுத்தியமைக்காக இச் சந்தர்ப்பத்தில் அதி மேதகு ஜனாதிபதி அவர்களுக்கும் கெளரவ பிரதம மந்திரி அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மிள் குடியேற்றம் பற்றிய உத்தியோக அறிக்கைகளும் இவற்றை தெளிவுபடுத்தும். வடக்கு மக்கள் நாளாந்தம் முகம்கொடுத்துவரும் பிரச்சனை பற்றி நாம் யாவரும் அறிவோம். இந்தச் சந்தர்ப்பத்தில் எம்முடன் கைகோர்த்து செயற்படுமாறு கெளரவ எதிர்கட்சி தலைவர் அவர்களையும் பிரச்சனைகளை தீர்பதற்கான பயணத்தில் ஒன்றிணையுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சிறிது முன்னோக்கி செல்வோமாயின் அவசரதேவைகளுக்கு மேலாக சில குறுகிய காலத்தில் தீர்க்கப்படவேண்டியவற்றை காண்கிறோம். கல்வி, வருமானம் மற்றும் தொழில் வாய்ப்புடன் பிணைந்துள்ள சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும்.

சமூகப் புரள்வினை வேலையின்மை ஏற்படுத்துகிறது. இதுவே இளஞர்களை பாதிக்கின்றது. இத்தகைய பாதிப்பினை தெற்கிலும் வடக்கிலும் எவ்வாறு சமனிலைத் தன்மையினை குறைத்தது என்பதை வரலாறு கூறும். எனவே இதனை நீடித்து நிலைக்கும் வகைகளில் தீர்த்துவைப்பது எமது கடமை.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

நீண்டகாலமாக நாம் அபிவிருத்தி அடைந்த உலக நாடுகள் போல் மிளிர்வதற்கு விரும்பினோம். இது வெறும் கதையாகவே மாறியுள்ளது. கடந்த 20-50 வருடங்களாக நாங்கள் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளூடாக இவற்றை நாம் பெற்றுக்கொள்ள முடியாது. எமது புதிய தந்திரோபாயங்கள் புதிய கைத்தொழில்கள் என்பன தேவை.

4வது கைத்தொழில் புரட்சி யுகத்தில் நாம் இருக்கிறோம் என நம்புகிறேன். பொருளாதார அதிகாரம் சிறிது சிறிதாக மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது என நினைக்கிறேன். விஞ்ஞானப் புரட்சிகள் அதிகாரப்பகிர்வுத் தொடர்பு என்பன பல புதிய கைத்தொழில்களையும் வர்த்தக ஈடுபாடுகளையும் ஏற்படுத்துகின்றன. முன்னைய கால கைதொழில் புரட்சி போல் அல்லாது 4வது புரட்சி மிக முன்னேற்றகரமானது. பல்வேறு கண்டங்ளில் இருந்து பல மில்லியன் மக்கள் கையடக்கத்தொலைபேசி போன்ற பல ஊடகங்களூடாக அறிவுகளைக் கற்றுக்கொண்டு அவர்களின் சந்தை வாய்புக்களை பெற்றுக்கொள்வது போன்ற நிலைமை வியக்கத்தக்க விதத்தில் உள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் இலங்கையில் சிறந்த புதிய சந்தர்பங்களை எற்படுத்திக் கொள்ளலாம். எதிர்காலத்தை எண்ணி எமது நாட்டையும் எமது மக்களையும் எமது உட்கட்டமைப்புகளையும், கல்விக்கொள்கை என்பவற்றினையும் முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகளை வடக்கிலோ அல்லது வேறு பகுதிகளிலோ ஏற்படுத்த முடியும் என்று தீர்மானிக்க முடியாது.
சில அரசியல்வாதிகள் இது இளஞர்களில் பிரச்சனை என்று கூடச் சொல்லலாம். ஏன் கற்றவர்கள் வெளியில் செல்கிறார்கள்?. தங்கள் கல்வியை முடிப்பதற்கு முன்னறே நாம் ஏன் எமது பிள்ளைகளை வெளியில் அனுப்ப முயற்சிக்கிறோம்.

கெளரவ சபாநாயகர் அவர்களே.....!

கல்வி கற்றவர்கள் ஏற்கனவே வெளியில் சென்றிருக்கிறார்கள் இன்னமும் சென்றுகொண்டிருக்கிறார்கள் இது எமது பொருளாதாரத்தில் பாரிய இழப்பாகும். இரண்டாம் நிலை, மூன்றாம் நிலைக் கல்வி வழங்குவதற்கு அரசாங்கம் அதிக நிதியை செலவிடுகிறது. சந்தர்ப்பங்கள் இல்லாததாலும் அதாவது ஆரம்பத்தில் யுத்தம் காரணமாகவும் இவர்கள் செல்வதால் இவர்களின் பயனை அந்த நாடுகள் அறுவடை செய்கின்றன. நாம் புதிய வாழ்க்கை நிலைமையை அதிகரிக்க வேண்டும் புதிய சந்தர்பங்களையும், வசதிகள் மற்றும் வர்த்தகத்தை உருவாக்க வேண்டும்.

ஏன் கல்விகற்றவர்கள் செல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து அவர்களை தடுப்பதற்கு ஆவணை செய்யவேண்டும். ஒரு மனிதன் கற்றதும் அவனுக்கு முதற்படியாக தேவைப்படுவது ஒரு சிறந்த தொழில் அல்லது வசதியாக வாழ்வதற்கான வாழ்வாதரம்.

இந் நாட்டில் சந்தர்ப்பங்கள் காணப்படாத போதும் தங்கள் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்கு படித்தவர்கள் விரும்பமாட்டார்கள். பொருளாதர வளர்ச்சி மூலம் சந்தர்ப்பங்கள் ஏற்படுத்தப்படலாம். இதன் மூலம் நாம் வளர முடியும். புதிய கைத்தொழில்கள் புதிய அறிவுரைகளைப் பெற்று வளர முடியும். தற்கால கேள்வியில் காணப்படும் அறிவுடன் மக்களை உபையோகிக்க வேண்டும்பு திய தொழில் நுட்பத்துடனும் புதிய அறிவுடனும் எதிர்கால கைத்தொழில் அமைய வேண்டும் என இணங்கினால் முதல் பணியாக இன்றைய புதிய சந்ததியினரை புதிய அறிவு மற்றும் திறன்களில் ஈடுபடுத்த வேண்டும் உட்கட்டமைப்பு மீள் குடியேற்றம் , தற்போதைய பிரச்சனைகளையும் தீர்வுகளையும் உரையாடிநேம் அனால் நீண்ட கால திட்டங்கள் மற்றும் நடைமுறைகள் பற்றியும் ஆராய வேண்டும்.

கடந்த காலங்களில் எமது வடக்கு கல்வியில் முன்னணியில் காணப்பட்டதை அறிவோம் இது தற்போது வெறும் வரலாறாகவே காணப்படுகின்றது இதனை நாம் மீண்டும் ஏற்படுத்த வேண்டும் வடக்கு இளைஞர்களின் கல்வி மற்றும் வளர்ச்சிக்கு எமது கல்வி எத்தகைய பாரிய பங்களிப்பினை வழங்கியது என்பதை இட்டு பெருமையாக உள்ளது போர் காரணமாக எமது கல்வி பின்தங்கி உள்ளதோடு எமது கல்வி கலாச்சாரமும் பொலிவிளந்துள்ளது இளைஞர்கள் தாங்கள் மாணவர்கள் என்ற எண்ணம் ஏற்படவும் கல்வியில் முன்னேற்றம் ஏற்படவும் எமது கவனத்தை செலுத்த வேண்டும விடுவிக்கப்பட்ட பிரதேசங்களில் சில கல்வி நிலையங்கள் திறக்கப்படாதுள்ளன உதாரணம் பலாலி பயிற்சி கலாசாலை போருக்கு பின்னரான காலத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி இளைஞனர்கள் தொழிற் கல்வி பெறுவதிலே ஆர்வம் காட்டுகின்றனர் பாடசாலை யால் நின்றவர்களும் பல்கலைக்கழகம் கிடைக்கபெறாதவர்களும் இத்தகைய கல்வியையே நாடுகின்றனர் .

ஆயினும் அடுத்த மாதம் அதிமேதகு ஜனாதிபதி அவர்களால் திறந்து வைக்கப்படவுள்ள ஜேர்மன் தொழில் நுட்ப கல்லுரிக்காக நாம் அவர்களுக்கு நன்றி கூற கடமைப்பட்டுள்ளேம் ஆயினும் எல்லா விண்ணப்ப தாரிகளையும் சேர்த்துக்கொள்ள கூடிய அளவில் இங்கு நிலையங்கள் காணப்பட வில்லை தென்மராட்சி பிரதேசத்தில் இத்தகைய தொரு தொழில் நுட்ப நிலையம் அமைப்பதற்கான பேச்சுவார்த்தையை கௌரவ திறன் விருத்தி அமைச்சர் ஏற்கனவே ஆரம்பித்துள்ளமைக்கு அவருக்கு நன்றி கூற கடமைபட்டுள்ளோம்.

கௌரவ சபானயக்கர் அவர்களே....

சிறந்த முறையிலான உட்கட்டமைப்பை கொண்ட அறிவு அடிப்படையிலான தொழில்சாலைகள் மிக முக்கியம் இரண்டாம் நிலைக்கல்வி கற்காதவர்கள் கூட இதன் மூலம் பயன் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் கல்வி முறையில் இருந்து விலகியும் பல்கலை கழகங்களுக்கு தெரிவாகாமல் இருப்பவர்களும் இதன் மூலம் பயன் பெறலாம் நாட்டின் உட் கட்டமைப்பு மற்றும் சமுக பொருளாதார நிலைமைகள் மேம்படுத்தப்பட்டால் வாழ்க்கை நிலைமையும் உயர்வடையும் சிறந்த தொழில் சான்றுகளுக்கு சிறந்த கல்வி தேவைப்படுமிடத்து சிறந்த தொழில்சாலைகளை உருவாக்க முடியும் இதனால் வெளிநாடு செல்வதை தடுக்கலாம் இவை யாவும் ஒன்றை ஓன்று பின்னி பிணைந்தவை அனால் எதிர்காலத்திற்க்காக நிறைவேற்றப்பட வேண்டும் இன்றைக்கே முதலீடு செய்யப்பட வேண்டும் நாளந்த பிரச்சனைகள் தீர்க்கப்படுவது நீடித்து நிலைக்கும் பெறுபேற்றினை எமக்கு வழங்கும்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com