Saturday, April 23, 2016

தென்கிழக்காசியாவிலேயே உயர்ந்த புத்தர் சிலையை திறந்து வைத்தார் மைத்திரிபாலா சிறிசேனா!

மத்துகம, ஓவிட்டிகல, பட்டமுல்லகந்த பௌத்த மத்திய நிலையத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுக்கன சிலையினை ஒத்த தெற்காசியாவின் மிகஉயரமான நிமிர்ந்து நிற்கும் புத்தர் சிலையினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று (23) முற்பகல் திறந்து வைத்ததுடன் 135 அடி உயரமான இந்த புத்தர் சிலைக்கு முதலில் மலர்களை வைத்து ஜனாதிபதியே வழிப்பட்டதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய சிறிசேனா, பௌத்த தர்மத்தின் அடிப்படையிலேயே சிறந்த சமூக அடிப்படை கட்டியெழுப்படும் எனவும் உலகில் பல துறைகளை சார்ந்த விசேட நிபுணர்கள் தற்போது பௌத்த தர்மத்தை தேடி வரும் நிலைமைக்கு மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் தர்மத்தை பாதுகாப்பவன், தர்மத்தினாலேயெ காக்கப்படுவான் என்பதை புத்த பகவானை வணங்கும் போது அடிக்கடி நினைவுறுத்திக் கொண்டு, பௌத்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்க்கை அமைத்து கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

135 அடி உயரம் கொண்ட இந்த புத்தர் சிலையானது மாகாண சபை உறுப்பினர் ஜகத் பின்னகொட அவர்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com