Saturday, January 30, 2016

யோசித உட்பட ராஜபக்ச குடும்பத்தினருக்கு நெருக்கமான ஐவருக்கு 14 நாள் விளக்கமறியல் உத்தரவு!


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதிபதி தம்மிக்க ஹேமபால உத்தரவிட்டுள்ளார்.

யோஷித ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்ட, சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட ஐவரை இன்று பிற்பகல் நிதிமோசடிப் பிரிவினரர், நிதிமோசடி குற்றச்சாட்டில் நீதவான் முன்னிலையில் ஆஜர் செய்தபோதே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கைது செய்யப்பட்டனர்.

சிஎஸ்என் தொலைக்காட்சி நிறுவனத்தில் இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிதி மோசடிகள் குறித்து இன்று காலை கடற்படைத் தலைமையகத்தில் வைத்து யோசித்த ராஜபச்சவிடம் விசாரணையை மேற்கொண்ட நிதி குற்ற விசாரணைப்பிரிவினர் அவரை செய்து செய்தனர்.

அதேநேரம் குறித்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் உட்பட முக்கியஸ்தர்கள் நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு வரவழைக்கப்பட்;டு விசாணையின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுள் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடக ஒருங்கிணைப்பாளர் ரொஹான் வெலிவிட்டவும் அடங்குகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் கடுவல நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது மகிந்த ராஜபக்ச , சிராந்தி ராஜபக்ச, கோட்டபாய ராஜபக்ச, பசில் ராஜபக்ச , நாமல் ராஜபச்ச என பலர் நீதிமன்ற வாசலில் கூடி நின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.













0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com