Saturday, January 30, 2016

அடுத்த சட்டமா அதிபர் யார் உப்புலா? ஜயந்தவா?

அரசாங்கத்தின் அடுத்த சட்டமா அதிபர் யார் என்பது தற்போதைய பேச்சுப் பொருளாகியுள்ளது. அதற்காக சிரேஷ்ட தரத்தில் இருப்பவர்கள் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் கடமை நேர சட்டமா அதிபர் சுகந்த கம்லத் ஆகியோரே. எனினும் சுகந்த கம்லத்திற்கு எதிரான பிரதான குற்றச்சாட்டு, அவர் ராஜபக்‌ஷ குடும்பத்தின் விஷேடமாக பஷில் ராஜபக்‌ஷவின் நெருங்கிய நண்பர்.

அத்துடன் அவருடைய சகோதரரான சன்தீப்த கம்லத், முகாமைத்து பணிப்பாளராக பதவி வகிக்கும் குருநாகல் பொபய்கனே ஜிபி நிறுவனம் அமைந்துள்ள பிரதேசத்தில் மேற்கொள்ளப்படுகின்ற பாரிய சுற்றுச்சூழல் பாதிப்புக்கு எதிராக சுகந்த கம்லத் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுச் சூழல் நிறுவனங்கள் குற்றம் சுமத்துகின்றன.

சுகந்த கம்லத் சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு எதிராக பாரிய எதிர்ப்புக்களை தற்போது வௌியிட்டுக் கொண்டிருப்பவர் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்னவே. அவரை சட்ட மா அதிபராக நியமிப்பதற்கு பரிந்துரை செய்துள்ளவர் முதலீட்டு ஊக்குவிப்பு சபையின் தலைவராக இருக்கும் முன்னாள் சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் உபுல் ஜயசூரிய. உபுல் ஜயசூரிய மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கிடையில் நீண்ட காலமாக காணப்படுகின்ற விரிசல் நிலை காரணமாக அந்தப் பதவிக்கு அவரை நியமிப்பதில் பாரி இடையூறுகள் மேற்கொள்ளப்படுவதாக சட்ட துறையினரின் கருத்து.

இதன் காரணமாக 19வது அரசியலமைப்பு சீர்திருத்ததத்தின் படி அமைக்கப்பட்ட அரசியலமைப்பு சபைக்காக பெயர் ஒன்றை முன்வைக்க முடியாமல் ஜனாதிபதி பெரும் சங்கடத்துக்கு முகங்கொடுத்துள்ளார். எனினும் அரசியலமைப்பு சபை பதவிக்காக பரிந்துரை செய்யப்பட்டது, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் அடுத்ததாக உள்ள சிரேஷ்ட அதிகாரியின் பெயரே.

இந்த விடயத்தை நன்றாக தெரிந்தும் அமைச்சர் ராஜித சேனாரட்ன அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கூறியிருப்பதாவது, "சட்டமா அதிபர் பதிவிக்காக வௌியில் இருந்து ஒருவர் நியமிக்கப்படுவார்" என்று. அதனை நியாயப்படுத்துவதற்காக அமைச்சர் கூறியிருக்கின்றார், சட்ட மா அதிபர் திணைக்களம் மஹிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தில் இருந்ததை விடவும் மிக மோசமாக மாறி இருக்கின்றது என்று. இது சட்ட மா அதிபர் திணைக்களத்தை மோசமாக குறிப்பிடுவதாகும்.

நிலைமை இவ்வாறு இருக்க, சட்ட மா அதிபர் திணைக்களத்தில் சுகந்த கம்லத்தை விடவும் கணிஷ்ட, பணி அடிப்படையில் மூன்றாம் தரத்தையும் தாண்டும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஜயன்த ஜயசூரியவை இதற்காக நியமிக்குமாறு ஜனாதிபதிக்கு அரசாங்கத்துடன் நெருங்கிய சட்டத்தரணிகள் சிலர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

எனினும் ஜயன்த ஜயசூரியவின் ஆசை சட்ட மா அதிபர் பதவியையும் விட உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் இந்த மூவருள் ஒருவர் அடுத்த வாரத்திற்குள் சட்ட மா அதிபராக பதவியேற்கவுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com