Saturday, May 16, 2015

மலைகத்தில் ஜனநாய புரட்சிக்கு ஆயத்தம்!

20 ஆவது திருத்தச்சட்டம் மலையக மக்களை பாதிக்குமாயின் அதற்காக மலையகத்தில் 'ஜனநாயக புரட்சயை' ஏற்படுத்தவும் சாத்வீக ரீதியிலான போராட்டங்களை அண்ணல் மகாத்மாகாந்தி அமரர் சௌமியமூரத்தி தொண்டமான் வழியில் மேற்கொள்ள சௌமிய இளைஞர் நிதியம் முன்வந்துள்ளது. இதன் முதற் கட்டமாக வரும் 19ம் திகதி செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரஅடையாள சத்தியாகிரகம் மௌனவிரதத்துடன் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்தூல் அனுஸ்டிக்கவும் இம்மாதம் 30 ம் திகதிக்கு முன்பு நல்ல முடிவு கிடைக்காவிடின் ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் சாகும் வரையிலான சத்தியாகிரகத்தை அந்தோனிமுத்துவின் தலைமையிலான பலர் மேற்கொள்ள உள்ளதாக நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் கண்டி பன்விலை மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் தின நிகழ்வில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின்படி சொல்லால் மாத்திரமின்றி செயலாலும் இந்த ஜனநாய புரட்சியை நடாத்தி மலையக மண்ணில் ஜனநாயத்தை நிலைநாட்ட தமது அமைப்பு முன்வந்துள்ளதாக தெரிவித்துள்ள நிதியம் 19ம் திகதி நிகழ்வு எட்டியாந்தோட்டையிலும் ஜுன் முதல் ஆரம்பமாகும் நிகழ்வு பன்விலையிலும் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையின் சுதந்திரத்திற்கு முன்பும் காலனித்துவ காலந்தொட்டு மலையக மக்களது உரிமைகளுக்காக உருளவள்ளி போராட்டம் , அல்கொல்லை வலையல் போராட்டம் போன்ற பல போராட்டங்களை நடாத்தி வெற்றிக்கொண்ட எட்டியாந்தோட்டையில் 19ம் திகதி ஆரம்பிக்கப்புடும் போராட்டம் ஜுன் மாதம் மலையக மெங்கும் மட்டுமின்றி தமிழகத்திலும் சர்வதேச சுதந்திர தொழிற்சங்க சம்மேளனத்தினதும் பல சிவில் அமைப்புக்களினது ஒத்துழைப்புடன் உலகின் பல பகுதியிலும் ஆதரவு அலைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிதியம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com