Friday, December 12, 2014

ஒதுக்கப்பட்ட நிதியில் கால் பங்கை கூட மக்களுக்கு கொடுக்காமல் முழுவதையும் விழுங்கிய EPDP

கந்தபுரம், கண்ணகிநகர், அக்கராயன், வன்னேரிக்குளம், கோணாவில் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 78 பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவியாக நல்லின மாடுகள் மற்றும் கோழிகள் என்பவற்றை வழங்கியுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தை பொறுத்தவரையில் முதற்தடவையாக ஒரு குறுகிய காலத்திற்குள் பெருமளவு நிதி வாழ்வாதாரத்திற்காக செலவு செய்யப்பட்டுள்ளது. அதிலும் நல்லின கால்நடைகளுக்காக 400 இலட்சம் ரூபாஒதுக்கப்பட்டு அவை பயனாளிகளுக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டும் உள்ளது.

இந்த கோழி கூடு ஒன்றின் விலை கோழிகளுடன் இணைத்து இருபதாயிரம். மாடு ஒன்றின் விலை ஐயாயிரம் மிகுதி பல லட்சம் ரூபாய்களை இந்த கும்பல் கொள்ளையடித்து தமது பக்கட்டில் வைத்துள்ளது .

இது தான் இவர்களின் மக்கள் அபிவிருத்தி மக்கள் பட்டினியில் கிடக்க சோடாவும் குளிர்பானமும் அருந்தி திரிகிறது இந்த கும்பல். மக்களுக்கு உதவிகள் வளங்கப்டுவதாக கூறி போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு மிகுதி பல லட்சங்களை கொள்ளையடிக்கும் இந்த கும்பலை என்ன சொல்வது மகிந்தா சிந்தை வாழ்க .இங்கே கால், கண் இல்லா பாதிக்கப்பட்ட மக்கள் சாப்பிட வழியின்றி துடிக்கிறார். இவருக்கு உதவிட எந்த கும்பலும் முயலவில்லை.

தற்போது அரசியல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் இப்படி உதவிகள் வழங்குவது எனற பெயரில் படங்களை எடுத்து மக்களை ஏமாற்றும் நிலை வடக்கில் தொடர்ந்துகொண்டிருப்பது அவதானிக்கபட வேண்டிய விடயமாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com