Friday, December 26, 2014

வவுனியா அருந்ததி மண்டபத்தில் ஜேவிபி!

மஹிந்தவை தோற்கடிப்போம் என்ற தொனியில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்ற ஜேவிபி எனப்படுகின்ற மக்கள் விடுதலை முன்னணியினர் நாளை வவுனியா அருந்ததி மண்டபத்தில் மக்கள் முன் பேசவுள்ளனர். நாளை காலை (27.12.2014) முற்பகல் 10 மணியளவில் இடம்பெறவுள்ள இக்கூட்டத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவும் அக்கட்சியின் மத்திய குழு உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய ராமலிங்கம் சந்திரசேகரனும் விசேட உரை ஆற்றவுள்ளனர் என ஜேவிபி வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.

மேலும் இவர்கள் நாளை மறுதினம் கிளிநொச்சி நகர மத்தியில் பெரும் மக்கள் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர் என்றும் அறியக்கிடைக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com