Saturday, December 27, 2014

ஈராக்கிற்கு திரும்பும் பிரிட்டிஷ் படைகள். By Mark Blackwood

ஒரு தசாப்தத்திற்கும் மேலான போரினைத்தொடர்ந்து, ஈராக்கிலிருந்து முன்பு விலகியதற்கு மாறாக பிரிட்டனின் ஆயுதப்படைகள் மத்திய கிழக்கை நோக்கி திரும்பிக் கொண்டிருக்கின்றன.

செப்டம்பரில், ஈராக்கில் ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக (ISIL அல்லது ISIS) அமெரிக்கா-தலைமையிலான போரில் இணைந்து கொள்வதற்கான அதிக அளவிலான கட்சி கடந்து பாராளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. அதற்கு பின்னர், ரோயல் விமானப்படை (RAF) வான் தாக்குதல்களை நடத்திவருகிறது, மேலும் ஈராக் குர்திஸ்தானை சேர்ந்த பிரிட்டிஷ் படைகள் பெஷ்மெர்கா இராணுவப்படைக்கு பயிற்சியளித்து வருகிறது.

ஞாயிறன்று, ஈராக்கிற்கு நிறைய படைகள் திருப்பி அனுப்பப்படும் என்று கன்சர்வேடிவ் / லிபரல்-ஜனநாயக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. பஹ்ரைனில் புதிய பிரிட்டிஷ் கடற்படை தளம் ஒன்று கட்டப்படும் என்ற இந்த மாதத்தின் ஆரம்ப அறிவிப்பினை இது பின் தொடர்ந்தது.

இந்த இராணுவ கட்டியெழுப்பலை – மத்திய கிழக்கு மற்றும் யூரேசிய பகுதி முழுவதும் உலகின் பிரதான சக்திகள் தங்களது நலன்களை நிலை நிறுத்திக்கொள்வதற்காக தீவிரமாகிவரும் ஏகாதிபத்திய போட்டிகள் என்ற கோணத்தில் பார்க்க வேண்டும். இந்த ஆதிக்கத்திற்கான நெருக்கடியில் ஈராக் மறுபடியும் மையப்புள்ளியாகிக் கொண்டிருக்கிறது.

நவம்பர் மாதம், ஈராக் மற்றும் சிரிய போரின் விரைவான விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்க பிரசன்னத்தின் அளவினை இருமடங்காக அதிகரித்து, அமெரிக்கா மேலும் 1,500 பேர் கொண்ட படை ஒன்றை ஈராக்கிற்கு அனுப்பும் என்று ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார், பிரிட்டனின் ஈராக் படைகள் வெளிப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்னதாக, வெளியுறவுத்துறை அமைச்சர் ஃப்ராங்க்-வால்டர் ஸ்ரைன்மையர், பாதுகாப்புத்துறை அதிகாரி ஊர்சுலா வொன் டெர் லையன் மற்றும் உள்துறை அமைச்சர் தோமஸ் டி மைஸியர் ஆகியோர் ஈராக்கில் ஜேர்மன் இராணுவ பயன்பாட்டினை குறிப்பிடும் வகையில் நீட்டிப்பதை அனுமதிக்கும் சட்ட வரைவினை முன்வைப்பதாக ஜேர்மன் பரபரப்பு ஏடான Bild அறிவித்தது. ஈராக்கின் குர்திஷ் பகுதியில் 100-க்கும் அதிகமான ஆயுதமேந்திய ஜேர்மன் படைகளை நிறுவுவதை இச்சட்ட வரைவு அனுமதிப்பதாக அவ்வறிக்கை கூறுகிறது.

வாஷிங்டனின் உள்ளார்ந்த செயல்பாட்டுத்தீர்மானத்தை ஆதரிப்பதற்காக ஈராக்கிற்கு எத்தனை பிரிட்டிஷ் படைகள் திருப்பி அனுப்பப்படும் மற்றும் அவை எங்கு நிறுவப்படும் என்பது கேபினெட் அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் உளவுத்துறை தலைவர்கள் ஆகியோரைக்கொண்ட இங்கிலாந்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலால் தீர்மானிக்கப்பட இருக்கிறது. நான்கு முகாம்களில் 200 பயிற்சியாளர்கள், ”படை பாதுகாப்பு” பாராசூட் நபர்கள் மற்றும் ரோயல் ஆயுதமேந்திய துணை இராணுவப் பணியாளர்கள் ஆகியோர் இவ்வாண்டின் ISIS தாக்குதல்களில் சேதமடைந்துபோயுள்ள, ஈராக் தேசிய இராணுவத்திற்கு பயிற்சியளிக்கவும், மறுகட்டமைப்பு செய்ய உதவுவதிலும் பணியமர்த்தப்படுவார்கள்.

போரிடுவதற்கு தயார் நிலையிலுள்ள இராணுவ வீரர்களைக்கொண்ட பகுதியும் இப்படையில் உள்ளடங்குமென்றார் பாதுகாப்புச்செயலாளர் மைக்கல் ஃபால்லோன். Telegraph உடன் பேசுகையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இரண்டாவதாகவும், ஃபிரான்ஸைவிட ஐந்து மடங்கு அளவிற்கும் RAF விமானம் அதிக எண்ணிக்கையிலான பணிகளில் பறந்திருக்கிறது,” என ஃபால்லோன் செருக்குடன் பேசினார்.

”தற்போது வான் தாக்குதல்களைத்தவிர, பயிற்சியிலும் எங்களது பங்களிப்பு அதிகம் இருக்கும்” குறிப்பாக, கார் மற்றும் ட்ரக் குண்டுகள் மற்றும் சாலையோர சாதனங்கள், மற்றும் அடிப்படையான இராணுவ வீரர்களின் திறமைகள் ஆகியவை சம்மந்தப்பட்டது என்பதே இதன் அர்த்தம்” என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

”அந்த உபகரணங்களுடன் அவர்களுக்கு உதவவும், அமெரிக்கர்கள் நிர்மானித்துவருகின்ற நான்கு முக்கிய பயிற்சி மையங்களில் அவர்களுடன் பயிற்சிகளை நடத்தவும் விரும்புகிறோம் ” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கிட்டத்தட்ட சீர்குலைந்து போயிருக்கும், ”அவர்களை ஜோர்டான் அல்லது சௌதியை நோக்கிய எல்லைப் பகுதியிலிருந்து நீக்கும்” சுதந்திர சிரிய இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதில் தலையிட இங்கிலாந்தும் எதிர்பார்க்கிறது, நாங்கள் அதனையும் தற்சமயம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார் ஃபால்லோன்.

ஈராக்கின் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளை தவறான முறையில் நடத்தியது மற்றும் சித்ரவதைகளுக்காக பிரிட்டிஷ் இராணுவத்தினரை குற்றம்சாட்டும் நூற்றுக்கணக்கான புதிய வழக்குகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஆலோசித்து வரும் செய்திகளுக்கு மத்தியில் ஈராக்கிற்கான திருப்பம் வருகிறது. மேலும் 2004-ல் பிரிட்டிஷ் இராணுவம் பிடித்த ஈராக்கிய சிறைக்கைதிகளை தவறான முறையில் நடத்தியது மற்றும் இறப்பு குறித்த இந்த வார புதன் கிழமையன்றைய உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றின் பிரசுரங்கள் ஆகியவையும் இதில் உள்ளடங்கும்.

பாரசீக வளைகுடாவில் பஹ்ரைனின் மின சல்மான் துறைமுகத்தில் 15 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இராணுவத்தளம் ஒன்றிற்கான புதிய திட்டங்களை பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகம் வெளியிட்டது. 2016 வாக்கில் இத்துறைமுகத்தின் தற்போதைய திறனை இச்செயல்பாடுகள் அதிக அளவில் நீட்டிக்கும், மேலும் ராயல் கடற்படைக்காக முன்னணி செலபாட்டுத்தளம் (FOB) ஒன்றின் நிரந்தர கட்டளைத் தளத்தை பாதுகாத்துக்கொள்ள இங்கிலாந்து அரசை அனுமதிக்கவும் செய்யும்.

மனித உரிமை மீறல்களை மறைத்துவிட்டு, இப்புதிய தளத்தினை பிரிட்டனிற்கான வெகுமதியாக பார்க்கும் பஹ்ரைனின் ஷியா பெரும்பான்மையின எதிர்ப்பாளர்கள் இச்செய்தியை வரவேற்றுள்ளனர். “புண்படுத்தும் ட்வீட்களை” வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் வந்திருக்கும் பஹ்ரைன் மனித உரிமைகள் மையத்தின் தலைவரான நபீல் ரஜாப், “நாங்கள் பல வருடங்களாக போராடி வருகிறோம், மேலும் பிரிட்டிஷ் அரசாங்கம் எப்பொழுதும் அடக்குமுறை ஆட்சியின் மற்றும் வளைகுடா பிராந்தியத்தின் அனைத்து சர்வாதிகாரிகளின் கருத்தையும் எடுத்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

துறைமுகத் தள விரிவாக்கத்திற்கு பஹ்ரினிய அதிகாரிகள் நிதியுதவியளிப்பார்கள் என்ற போதிலும், இது 1971–ல் அப்பகுதியிலிருந்து இங்கிலாந்து முறைப்படி விலகியதிலிருந்து, மத்திய கிழக்கில் பிரிட்டன் முதல் நிரந்தர இராணுவத் தளத்தை உருவாக்கும். இது 1956 சூயஸ் கால்வாய் நெருக்கடியில் அமெரிக்க அழுத்தங்களால் பிரிட்டன் அவமானகரமாக பின்வாங்க கட்டாயப்படுத்தப்பட்ட பின் நீண்டகால விளைவாக உள்ளது.

”சூயஸின் கிழக்கு” (East of Suez) என்ற சொற்றொடர் பிரிட்டிஷ் அரசியல் மற்றும் இராணுவ உரையாடலில் ஐரோப்பிய அரங்கங்களுக்கு அப்பால் ஏகாதிபத்திய நலன்களைக் குறிக்கும் ஒரு வெளிப்பாடாகும். இதேபோல, இப்பகுதிக்கான ஒரு நிரந்தரமான திருப்பம், பிரிட்டிஷ் முதலாளித்துவத்தின் ஏகாதிபத்தியக் கொள்கையின் மறுமலர்ச்சியை முக்கியத்துவப்படுத்துகிறது. ஃபால்லோன் 1971 விலகலை ”குறுகிய காலத்தியது” என்று விவரித்ததுடன், அமெரிக்காவிற்கு இது மிக முக்கியமான பகுதி. “அதில் நமக்கு வர்த்தக ரீதியான ஆர்வங்கள் மட்டுமல்ல அரசியல் ஆர்வமும் உண்டு” என்றார்.

வெளியுறவு செயலாளர் பிலிப் ஹேமண்ட் ஆசிய-பசிபிக் பகுதி நோக்கிய அமெரிக்க “முன்னெடுப்பின்” காரணமாக, மத்திய கிழக்கு அரசுகளை “ஸ்திரமாக்க” உதவுவதில் பிரிட்டன் ஒரு முக்கிய பங்காற்ற வேண்டி இருக்கும்” என்று அறிவித்தார். பிரதமர் டேவிட் கேமரூன் ”உலகப் பொருளாதாரம் கடினமாவதிலிருந்து வர்த்தகத்தை காப்பாற்றி வைத்திருக்கும் தமனிகள்” என்று ராயல் கடற்படையைக் குறிப்பிட்டார்.

பாரசீக வளைகுடாவில் ராயல் கடற்படை வகை 45 இராணுவக் கப்பல்கள், சிறுகப்பல்கள் மற்றும் விமானம் தாங்கிகள் ஆகியவை அடங்கிய புதிய வசதிகள், பிரிட்டிஷ் இராணுவ செயல்பாடுகளை பலப்படுத்தும், அதில் இரு புதிய தலைமை தாங்கிகளான HMS Queen Elizabeth மற்றும் HMS Prince of Wales ஆகியவையும் உள்ளடங்கும். இவை இரண்டும் தற்போது கட்டுமானப் பணியில் உள்ளன மேலும் இவை “ராயல் கடற்படைக்காக கட்டப்பட்டவைகளிலேயே மிகப்பெரிய மற்றும் சக்திவாய்ந்த போர்க்கப்பல்கள்” என வர்ணிக்கப்படுகின்றன.

”போர்க்களத்திற்குள் கொண்டு வருவதற்கான பெரிய அளவிலான விமான ஆதரவும் இதற்கு கிடைக்கும் என்றும் அர்த்தம்”, என்றார் கிழக்கு மற்றும் வளைகுடா இராணுவ பகுப்பாய்வு நிறுவனத்தின் நிறுவனரும் தலைமைச் செயலதிகாரியுமான ரியாட் காவ்ஜி. ”பெரும் விமான ஆதரவு” என்று காவ்ஜி விவரிப்பது, துரிதமாக பறக்கும் Lockheed Martin F35 மற்றும் செங்குத்தாக இறங்கும் இரகசிய ஜெட் விமானம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கும் ஆதரவே. பிரிட்டிஷ் அரசு இதுபோன்று 40 நாசகரமான எந்திரங்களை நிர்மாணித்திருப்பதுடன், ”உலகின் மிகவும் மேம்பட்ட இரகசிய போர்விமான வெடிதாங்கி” என்று அதனை விவரிக்கவும் செய்கிறது.

பிரிட்டிஷ் இராணுவப் படைத்தலைவரான ஜெனரல் சர் நிகோலஸ் ஹஃப்டன், “இதுதான் அதன் மூலோபாய முக்கியத்துவம். இதனை ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டு நோக்கத்திற்காக ஒரு பகுதியில் தற்காலிகமான பயன்பாடு என்று மட்டுமே பார்ப்பதை விட, பிரிட்டன் இப்பகுதியின் ஸ்திரத்தன்மை நலன்களை அனுபவிக்கிறது என்ற உண்மையின் பெரும் அடையாளமாகவும் இருக்கிறது” என்றார்.

ராயல் ஐக்கிய சேவைகள் நிறுவனம் (RUSI) 2013-ல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் பிரிட்டனின் ஏகாதிபத்திய நோக்கங்களின் எதிர்காலப் போக்கினை இராணுவ ஆலோசனைக்குழு கோடிட்டு காட்டியது. ”கிழக்கு சூயிஸுக்கான திருப்பம்? வளைகுடாவில் இங்கிலாந்து இராணுவப்பயன்பாடு” என்று தலைப்பிடப்பட்ட அவ்வறிக்கை, ”பஹ்ரைனில் ராயல் கடற்படையின் பரபரப்பான அக்கறை” பற்றி விவாதிக்கிறது.

துபாயில் Al-Minhad விமானத் தளத்தை, “2014ல் ஆப்கானிஸ்தானில் இராணுவ குறைப்பிற்கான மையமாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் செயல்படுத்த தயாராக இருக்கும் சிலவற்றின் வெளிநாட்டுத் தளமாகவும்” பயன்படுத்த RAF அமைக்கப்பட்டது என்று தொடர்ந்து விவரிக்கிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறுவது ”போர் நிலைமைகளின் மோசமான” சூழ்நிலைக்காக தங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்வதற்கான பிரிட்டிஷ் படைகளின் திறனை மோசமாக பாதித்திருக்கிறது, இதனை எதிர்கொள்வதற்காக இந்த விமானத்தளம் தொடர்ந்து செயல்பட்டு வரும்.

”சகித்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை வாஷிங்டனுக்கு வலியுறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டது போலத் தெரியும் இதனை, அமெரிக்கா-இங்கிலாந்தின் சிறப்பு உறவின் – ஒருவேளை இதுமாறினால் இங்கிலாந்துடனான சிறப்பு உறவின் ஒரு புதிய புவி-அரசியல் வெளிப்பாடாக பார்க்க முடியும்” என்று வாதிடுவதன் மூலம், பிரிட்டனின் வளைகுடா பகுதி நோக்கிய திரும்பலின் சாத்தியக்கூறுகளை இந்த RUSI ஆவணம் மேற்கோள்காட்டியது.

வளைகுடா நோக்கிய திருப்பம், ”அநேகமாக இந்தியப்பெருங்கடல் மற்றும் துணைக்கண்டத்தை இணைக்கும் பகுதியில் கூடுதல் செயல்பாடுகளுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுக்கும்” என்று அறிவித்து, இது பிரிட்டிஷ் இராணுவத்தின் கூடுதல் விரிவாக்கத்திற்கான முன்னோடியாக இருக்குமென்றும் அது கணிக்கிறது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com