Tuesday, September 23, 2014

ரூ.2 கோடி கப்பம் கேட்டவர் கைது !!

நபரொருவரை கொலை செய்வதாக அச்சுறுத்தி, 2 கோடி ரூபாய் கப்பம் கோரிய சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. 2014 ஆம் ஆண்டு 7 ஆம் மாதம் 30 திகதி தனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்திய சந்தேக நபர், தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்வதாக அச்சுறுத்தியதாகவும் அதற்கு பதிலாக இரண்டு கோடி ரூபாய் பணத்தினை கப்பமாக கோரியதாகவும் மொனராகலை உலங்தாவ பிரதேசத்தை சேர்ந்த நபரொருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தார்.

இந்த முறைப்பாடு தொடர்பில் மொனராகலை பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளை அடுத்து சந்தேக நபர் நேற்று திங்கட்கிழமை(22) கைது செய்யப்பட்டுள்ளார்.நுகேகடை, உலங்தாவ தெற்கு, மொனராகலை எனும் முகவரியில் வசிக்கும் உபுல் சமன்குமார என்பவரே இவ்வாறு சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரை இன்று செவ்வாய்க்கிழமை(23) மொனராகலை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறினர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com