Sunday, August 31, 2014

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நழுவிவிட்டதாம்!-சிங்களப் பத்திரிகை

மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டி யிடும் சந்தர்ப்பம் ஜனாதிபதி மஹிந்தவிற்கு நழுவிப் போய்விட்டடது என சட்டவல்லுனர்கள் தெரிவித்துள் ளனர் என்று சிங்களப் பத்திரிகை யொன்று செய்தி வெளியிட் டுள்ளது

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் குறைபாடுகளுடன் நிறைவேற்றப்பட்டமையே இதற்கு காரணம் எனவும் முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா முதன் முறையாக வெளியிட்ட சட்ட ரீதியான தர்க்கம் சக்திமிக்கதெனவும் அதனை மீற முடியாதென்றும் அப்பத்திரிகை சுட்டியுள்ளது

அரசியலமைப்பின் 32/2 ஷரத்தின்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட எந்தவொரு நபரும் அதன் பின்னர் அந்தப் பதவிக்கு மக்களால் தெரிவு செய்யத் தகுதியற்ற வராகிறார் என்று சட்ட விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ 2010 ஜனவரி 27ஆம் திகதி இரண்டாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவுடன் சட்டவிதிகள் செயற்படுவதாக சரத் என். சில்வா சமீபத்தில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

அப்போது இந்த சட்டவிதிகள் அமுலில் இருந்த போதே அவர் ஜனாதிபதி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டதால் அவர் மூன்றாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகிறார்.

எனினும் 2010 செப்டெம்பர் 9 ஆம் திகதி முதல் நடைமுறையிலிருந்த 18ஆவது திருத்த சட்டத்தின் மூலம் மேற்கண்ட 31/2 ஷரத்து நீக்கப்பட்டது. இதன்படி கால வரையறையின்றி மீண்டும் ஜனாதிபதி பதவிக்குத் தெரிவு செய்ய எந்தவொரு நபருக்கும் வாய்ப்புள்ளது. இருந்தும் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்னர் ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட மஹிந்த ராஜபக் ஷவுக்கு அந்த சந்தர்ப்பம் கிடைக்காது. இவ்வாறு அச்சிங்கள பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப் பட்டுள்ளது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com