Sunday, August 31, 2014

நவநீதம்பிள்ளை இன்றுடன் ஓய்வு! இலங்கை விவகாரம் தொடர்பில் வாய்மூல அறிக்கை செப்டெம்பர் மாதம் 8 முதல் 26!

தற்போதைய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவ நீதம்பிள்ளை இம் மாதத்துடன் ஓய்வு பெறுவதையடுத்து ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளராக ஜோர்தான் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைன் புதிய ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரா நாளை முதல் பொறுப்பேற்க வுள்ளார்.

செப்டெம்பர் மாதம் 8 திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா கூட்டத் தொடர் 26 ஆம் திகதிவரை நடைபெறும். இலங்கை விவகாரம் தொடர்பில் விசா ரணை நடத்திவரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் விசாரணையின் முன்னேற்றங்கள் குறித்து இந்தக் கூட்டத் தொடரில் வாய்மூல அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ளதென தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை முதல் நாள் அமர்வில் உரையாற்றவுள்ள ஐக்கிய நாடுகளின் புதிய மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து பிரஸ்தாபிப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இலங்கையின் சார்பில் அமர்வில் கலந்துகொள்ளும் ரவிநாத ஆரியசிங்க மனித உரிமை அலுவலகத்தின் வாய்மூல அறிக்கைக்கு பதிலளித்து உரையாற்றுவார் என தெரிவிக்கப்படுகின்றது

மனித உரிமை அலுவலகத்தின் விசாரணை குழுவானது இலங்கை விவகாரம் தொடர்பில் ஜெனிவாவில் விசாரணை செயற்பாடுகளை நடத்திவருகின்றது. அத்துடன் விசாரணை செயற்பாட்டை வலுப்படுத்தும் நோக்கில் புதிய ஏற்பாடுகளை விசாரணை கட்டமைப்பில் இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் குறிப்பாக விசார ணைகளுக்கு வெளிநாட்டு அரசாங்கங்களின் உதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்ட ஏற்பாடுகளை தமது திட்டத்தில் மனித உரிமைப் பேரவை இணைத்துக்கொள்ளவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் குறித்த விசாரணைக்கு இலங்கை அரசு அனுமதி மறுத்திருந்த நிலையில் இலங்கைக்கு விஜயம் செய்யாமலேயே விசாரணை செயற்பாடுகளை முன்னெ டுக்க முடியும் என்று பதவி விலகிச் செல்லும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com