ஹட்டனில் பஸ்ஸுடன் முச்சக்கர வண்டி மோதியதில் இருவர் படுகாயம்! (படங்கள் இணைப்பு)
ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செனன் வூட்லேண்ட் பகுதியில் கண்டியிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றுடன் ஹட்டனிலிருந்து கினிகத்தேனைவரை சென்ற முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த இருவர் படுங்காயமுற்று வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (09) பிற்பகல் 2.30 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
முச்சக்கர வண்டியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தினால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். படுங்காயமுற்ற இருவரும் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வட்டவளை வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
குறித்த பஸ் சாரதியை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment