Saturday, August 2, 2014

இந்தியாவையோ அமெரிக்காவையோ நம்புவதில் அர்த்தம் இல்லை! தீர்வு வேண்டுமானால் ஒரே ஒரு வழி உண்டு!

இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு நாடும் அழு த்தம் பிரயோகிக்க முடியா எனவும் இலங்கை அரசாங் கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஆலோசனைகளை வழங்க முடியும் எனவும் அதனைதான் தென்னாபிரிக்கா செய்கின்றது என பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரி வித்தார்.

இலங்கை விவகாரத்தில் எவ்விதமான வெளித் தலையீடு களும் இருக்கக்கூடாது என்பதில் இந்தியா உறுதியுடன் இருக்கின்றது. ஆனால் இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது அர்த்தமற்ற செயற்பாடாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்தியாவையோ அமெரிக்காவையோ அவர்கள் நம்புவதில் அர்த்தம் இல்லை. நாட்டில் பெரும்பான்மை இனத்தை பகைத்துக்கொண்டு தமிழ்த் தலைமைகளினால் ஒருபோதும் அரசியல் தீர்வைப் பெற முடியாது. பெரும்பான்மை மக்களுடன் புரிந்துணர்வுடன் செயற்படுவதன் மூலமே இணக்கமான தீர்வைப் பெற முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டபோது அதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்தது. ஆனால் இதன்மூலம் என்ன பயன் கிடைக்கப்போகின்றது என்று தெரியவில்லை.

காரணம் தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வெளிநாட்டுச் சக்திகளுடன் செயற்பட்டுக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லை. அரசியல் தீர்வைப் பெறுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் நாட்டின் பெரும்பான்மை மக்களின் மனதை வெல்லவேண்டும் என தெரிவித்தார்.

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் எந்தவொரு வெளிநாட்டுத் தலையீடுகளும் இருக்கக்கூடாது என்று இந்தியா தெரிவித்துள்ளமை தொடர்பில் குறிப்பிடுகையி லேயே அமைச்சர் இந்த விடயங்களை கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com