Wednesday, June 4, 2014

ஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாத ஜெயா!! தனி ஈழம் அமைக்க புலம் பெயர் தமிழரிடம் வாக்கொடுப்பு நடாத்தவேண்டுமாம்!!

தமிழக முதல்வர் ஜெயலலிதா டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை செவ்வாய்க்கிழமை சந்தித்து பேசினார். அப்போது, கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பது உள்ளிட்ட தமிழக நலன் சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய 65 பக்க மனுவையும் கொடுத்தார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒருநாள் பயணமாக செவ்வாய்க் கிழமை டெல்லி வந்திருந்தார். சாணக்யபுரியில் உள்ள புதிய தமிழக அரசு இல்லத்தில் தங்கிய அவர், பிற்பகல் 1 மணியளவில் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்று, குடியரசுத் தலைவரை சந்தித்து சிறிதுநேரம் உரையாடினார். பின்னர், தமிழக அரசு இல்லத் துக்கு திரும்பிய அவர், பிற்பகல் 3.30 மணியளவில் தெற்கு பிளாக் கில் உள்ள பிரதமர் அலுவலகத் துக்குச் சென்று, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைப் பிரித்து தனி ஈழம் அமைக்க இலங்கைத் தமிழர் மத்தியிலும் புலம் பெயர்ந்த தமிழர்களிடமும் பொது வாக்கெடுப்பு நடத்தக்கோரி ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியைச் நேற்று செவ்வாய்க்கிழமை, சந்தித்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, இலங்கை, தமிழகம் தொடர்பான பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனு ஒன்றையும் அளித்தார்.

இந்த கோரிக்கையிலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஜனநாயகம் என்ற பதத்திற்கு அர்த்தம் தெரியாது என்பதை தெளிவாக புரிந்து கொள்ள முடியும்

6 comments :

Anonymous ,  June 4, 2014 at 7:28 PM  

What she makes a complete farce,she just dramtize the politics.She may be winning the hearts of her limited fans.That's all.

Anonymous ,  June 4, 2014 at 8:43 PM  

தமிழ் தேசியகூட்டமைப்புக்கு ஏதாவது அதிகாரங்களை பகிர்வு செய்தால் அது இலங்கைத் தமிழர்கள் பெற்றுக் கொண்டதாக கருத முடியாது.

துரதிஷ்டவசமாக அப்படி ஏதாவது நடந்தால் முப்பது வருட அழிவுகாலங்களையும் தாண்டி இன்னும் மேலான அழிவுககளையே சந்திக்க நேரிடும். பலாலி கூடா அமெரிக்கவிமானத்தளமாக மாறுவதற்கும் சாத்தியப்பாடு உண்டு.

தமிழன்-அரசியல் இலங்கையை தனது தாய்நாடு என ஏற்றுக் கொள்ள முடியாத கோணங்கி அரசியல்.

ஜெய அம்மா ஈழத்தமிழர்களுக்காக கதைக்க வில்லை. தமிழ்நாட்டு வாக்குகளை தஜா பண்ணி தங்கவைத்துக் கொள்வதே நோக்கம்.

அம்மா தனது அரசியலை சாப்பாட்டுகடையுடன் நிறுத்திக் கொள்வது "அம்மாயரசியல்" லுக்கு நல்லதும் விளம்பரமும் கூடா.

Arya ,  June 4, 2014 at 9:52 PM  

உரிந்து போட்டு ஆடும் ஒருத்தி , ஒரு கூத்தாடியின் வைப்பாட்டி , ஊழல் பெருஞ்சாளி , இவள் யார் எங்கள் நாட்டை பிரிப்பதுக்கு , தன்ர நாட்டில் தன் மக்களுக்கு முதலில் மல சல கூட வசதியை இவள் ஏற்படுத்தி கொடுக்கட்டும் முதலில், கச்சதீவில் சீனாவுக்கு கடற்படை , இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்தால் இந்த கக்கூசு கூட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது, இலங்கை அரசு முதலில் அதை செய்ய வேண்டும், இந்த தமிழ் நாட்டு கக்கூசுகளுடன் உறவை அறுக்க வேண்டும் , அந்த உறவால் தான் இலங்கை சீரழிந்தது , பயங்கரவாதம் அங்கிருந்துதான் இலங்கைக்கு ஏற்றுமதியானது.

Anonymous ,  June 5, 2014 at 3:57 PM  

Make yourself perfect,before you finger into others matters.

Anonymous ,  June 5, 2014 at 8:13 PM  

வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வரவேன்டும் என சொன்னதால் ஒரு பிரபல நடிகரை படுத்திய பாட்டுக்கு பெயர் என்ன. தமிழன் ஆளும் நட்டில் தமிழனுக்கு பேச்சு சுதந்திரம் இல்லை. இந்த இலட்சணத்தில் இலங்கை தமிழனுக்காக ஒப்பாரி. கடலுக்கு அந்தப்பக்கம் இருக்கும் தமிழனை விட்டுங்க உங்களுடன் இருக்கும் அகதி தமிழனுக்கு தமிழ் நாட்டு தமிழன் மாதிரி உரிமை வேன்டாம் வாழ முடியுதா

Anonymous ,  June 6, 2014 at 6:53 PM  

Madam CM,
If you have any guts to speak about
the International matters,why not you speak about the other Int serious matters.What's happening in east Ukraine Kiev,Bokko Haram abduction of 250 Nigerian girls,gang rapes on daily basis in your own country.Big issue of caste difficulties.
The matter in Srilanka,is our matter
we can solve it easily and peacefully.YOU NEED
NOT TO WORRY.Do not make gutless
performances.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com