Wednesday, June 4, 2014

நகர சபை உறுப்பினரின் மகள் திட்டித்தீர்த்தாள்….அடித்து உதைத்தாள்…! - பாதிக்கப்பட்ட 40 வயது பெண்மணி முறைப்பாடு!

பேலியகொட நகர சபையின் உறுப்பினர் ஒருவரின் மகள் ஒருவர் பேலியகொட மீன் வியாபார நிலையத்திற்கு வந்து தன்னை கடுமையாகத் தாக்கியதாக 40 வயது பெண்ணொருத்தி பேலியகொட பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள குறித்த நகர சபை உறுப்பினர் மகள், பேலியகொட மீன் வியாபார நிலையத்தில் இருக்கின்றவர்களுக்கு “பேக்”களை தொகையாக வழங்கும் வியாபாரத்தைச் செய்கின்றார் எனவும், அவர் அதிக விலைக்கு அவற்றை வழங்குவதனால் தான் அவரிடம் வாங்காமல் குறைந்த விலைக்கு விற்கும் கடைக்குச் சென்று வாங்கிவருவதாகவும், அதனால் கோபமடைந்தே தன்னை வியாபார நிலையத்தின் மாடிக்கு அழைத்துச் சென்று தீய வார்த்தைகளால் திட்டித் தீர்த்து, தன்னைத் தாக்கியதாகவும் குறித்த பெண் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com