குடல்வழிப் புற்று நோய்க்குக் காரணம் மாட்டிறைச்சி சாப்பிடுவதே! - வைத்தியர் வசந்த திசாநாயக்க
சென்ற வருடம் 520 நோயாளிகள் குடல் புற்றுநோய் காரணமாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளர்.வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் வசந்த திசாநாயக்க, இந்நோயாளர்களின் தொகை நாளுக்கு நாள் அதிகரிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பெருங்குடலில் புற்றுநோய் ஏற்பட்ட 247 பேரும், சிறுகுடலில் புற்றுநோய் ஏற்பட்ட 10 பேரும், குத வழிப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டோர் 263 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளோரில் உள்ளடங்குவதாகக் குறிப்பிடுகின்ற அவர், இந்நோய்க்கான முக்கிய காரணம் மாட்டிறைச்சி சாப்பிடுவதே எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கீரைவகை, பழங்கள் என்பவற்றை அதிகம் உட்கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குடல்வழிப் புற்றுநோயிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டுமானால் மாட்டிறைச்சி சாப்பிடுவதிலிருந்து தவிர்ந்துகொள்ள வேண்டும் என அவர் தெளிவுறுத்துகின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment