Tuesday, May 27, 2014

கிளிநொச்சியில் மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற உப அதிபர் கைது!!

13 வயதான மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்ததாக கிடைத்த முறைப்பாட்டை அடுத்து 51 வயதான பாடசாலை உப அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி நகரில் தனியார் பகுதி நேர வகுப்புக்கு சென்றிருந்த மாணவியை, அங்கு கற்பித்து வந்த உப அதிபர் இவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார். ரம்பேவ, மாஹகன தராவ பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட இந்த நபர் கிளிநொச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com