Tuesday, May 27, 2014

யாழ் பிரதான வீதி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கொள்ளை !!

யாழ். பிரதான வீதி, மடத்தடி பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்றிரவு துணிகர கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இரவு 8.00 மணியளவில் எரிபொருள் நிரப்பு பகுதியில் நின்று விற்பனை அளவீடு குறித்து மதிப்பீடு செய்து கொண்டிருந்த எரிபொருள் நிரப்புனர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் தலைக்கவசத்தினால் தாக்கி விட்டு கையிலிருந்த ஏறக்குறைய 20 ஆயிரம் ரூபா வரையான பணத்தை பிடுங்கிக் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் மாயமாக மறைந்துவிட்டனர். தாக்குதலுக்குள்ளான எரிபொருள் நிரப்புனர் சுதாகரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளின் இலக்கத்தை அவதானித்து பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். தலைக்கவசத்தினால் தாக்கப்பட்ட நிரப்புனர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com