Tuesday, May 27, 2014

கிராமத்தை அச்சுறுத்தும் இறந்த யுவதியின் ஆவி!!

அனுராதபுரம், தம்புத்தேகம நகருக்கு அருகில் உள்ள கிராம் ஒன்றில், அண்மையில் இறந்த யுவதியின் ஆவி சுற்றி திரிவதால், கிராமவாசிகள் இரவில் கடும் அச்சத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. மாலை 6.30 முதல் 7 மணி வரையான காலத்தில் கிராமத்திற்கு நடுவில் இருக்கும் குளம் ஒன்றின் கால்வாய் ஒன்றில் வெள்ளை உடையணிந்த அழகான யுவதி நடப்பதாகவும் அவர் தனிமையில் செல்லும் நபர்களை தன்னிடம் வருமாறு கைகளால் சைகை காட்டுவதாகவும் கிராம மக்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்தை எதிர்நோக்கிய பலர் சுகவீனமுற்றுள்ளதாக தெரியவகிறது. கடந்த 24 ஆம் திகதி மாலை வெள்ளை உடையணிந்த இந்த யுவதியை கண்ட இளைஞர் ஒருவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டுள்ளதுடன் வாய் பேச முடியாது ஊமை யாகியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com