முழந்தாளிட்டு வணங்கி மன்னிப்புக் கோருமாறு பொலிஸாருக்கு ஆணையிட்டார் பிரதியமைச்சர்…!
மாத்தறை மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி அமைச்சர் ஒருவரினால் பொலிஸ் அதிகாரி ஒருவர் முழந்தாளிடச் செய்வதற்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது. மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி தெற்கு அதிவேக பாதையில் வேக எல்லையை கணக்கிற்கொள்ளாமல் மணித்தியாலத்திற்கு 140 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்த பிரதியமைச்சருக்கு கொட்டாவை நுழைவிடத்திலிருந்து பொலிஸாரில் ஒருவர் வாகனத்தை நிறுத்தி அபராதத் தொகை செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு பிரதியமைச்சர் பொலிஸ் அதிகாரிக்கு எச்சரிக்கை செய்து, முழந்தாளிட்டு தன்னிடம் மன்னிப்புக் கோருமாறு கூறியுள்ளார்.
என்றாலும், குறித்த பொலிஸ் அதிகாரி அவ்வாறு செய்யாதிருந்திருக்கின்றார். அத்தினமே பொலிஸ் அதிகாரி கொட்டாவ நுழைவிடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு இடம்மாற்றப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment