Friday, May 23, 2014

பொலிஸ் காதல் கசக்கிறது.. பொலிஸ் காதலர்கள் கைகலப்பில்…!

பொலிஸ் ஆண், பெண் அதிகாரிகளான காதலர்கள் தங்களுக்குள் காதல் கசந்ததால் அடிதடியென்று போனதால் பொலிஸ் காதலனின் தாய் தந்தை இருவரையும் கஹடகஸ்கிலிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஆண் பொலிஸ் அதிகாரி காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலும், பெண் பொலிஸ் அதிகாரி எல்பிட்டிய பொலிஸ் நிலையத்திலும் சேவை செய்துவருகின்றனர். இருவரும் ஒருவரையொருவர் காதலித்ததனால் இருவரும் திருமணம் செய்துகொள்ள தீர்மானித்ததாக பெண் பொலிஸ் அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

தான் தனது காதலியைத் திருமணம் செய்துகொள்வதற்கு தனது பெற்றோர் தடையாக இருக்கின்றனர் என்பதால், காதலியை விட்டு தூர விலகிச் செல்வதற்காக தான் முயன்றபோது, தனது காதலி தனது வீட்டுக்கு வந்து தன்னை எவ்வாறேனும் திருமணம் செய்துகொள்ளுமாறு பிரச்சினைப்படுத்தி, தன்னைத் தாக்கியதாக காதலனான பொலிஸ் அதிகாரி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார் எனத் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com