எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள் அதனை வெளிக்காட்டும் வகையில் வாக்குச் சீட்டு தயாரிக்கப்படுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாம்…!
நாட்டில் மாற்றத்திற்குள்ளாகாத உறுதியான முறையில் வடிவமைக்கப்பட்ட தேர்தல் முறை ஒன்று இல்லை என்றும், வருடந்தோறும் நடைபெறுகின்ற வெசாக் பண்டிகை, பொசன் பண்டிகை, சுதந்திர தின விழாக் கொண்டாட்டம் போல அது மாறியுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
கட்சிகளின் பொதுச் செயலாளர்களுடனான விசேட கலந்துரையாடல் ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றபோதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.
வருடந்தோறும் வாக்காளர் இடாப்பினை திருத்தத்திற்கு உட்படுத்தாது, தேர்தலொன்று வரும்போது மட்டும் திருத்தத்திற்கு உட்படுத்தும் திறந்த முறையிலான வாக்காளர் தேர்தல் இடாப்பினை பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் வாழ்கின்ற இரண்டு மில்லியன்களுக்கும் மேற்பட்ட இலங்கையர்களும் தேர்தலில் வாக்களிக்கக் கூடிய முறையில் தபால் வாக்களிப்பு முறையொன்றை ஏற்படுத்துவது தொடர்பிலும் அங்கு கலந்துறவாடப்பட்டது.
எந்தவொரு அரசியல் கட்சிக்கும் வாக்களிக்காத வாக்காளர்களுக்காக, அதனை வெளிப்படுத்த “மேற்சொன்ன எந்தவொரு கட்சிக்கும் வாக்களிக்க மாட்டேன்” என்ற ஒரு வாக்கியம் வாக்குச் சீட்டின் இறுதியில் இணைப்பதற்கான யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
(கேஎப்)
0 comments :
Post a Comment