மாரடைப்பு நோயாளியை காலால் உதைத்துத் தள்ளிய வைத்தியர் பற்றித் தெரியுமோ?
மாரடைப்பு நோயாளி ஒருவரை வைத்தியர் ஒருவர் காலால் உதைத்துத் தள்ளியதாகக் கூறி எம்பிலிப்பிட்டிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சூரிய திசாநாயக்க எனும் பெயருடைய குறித்த மாரடைப்பு நோயாளியை, வைத்தியர் வைத்தியசாலை “கொரிடோ“வில் வைத்து காலால் உதைத்திருப்பது “டிக்கட்“ வெட்டியதன் பின்னர் மருந்துகள் எழுதப்படுகின்ற புத்தகத்தைக் கேட்டபோதே என தாக்குதலுக்கு உள்ளான நோயாளியின் உறவினர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எவ்வாறாயினும் நிலைமையை சுமுகநிலைக்கு கொண்டுவருவதற்கும், ஒருமைப்பாட்டுக்கு இருவர் வருவதற்கும் வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் அனுஜ ருத்ரிகு ஆவன செய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
அத்தோடு வைத்தியசாலை கொரிடோவில் இதற்கு எதிராக நோயாளி தனது எதிர்ப்பைக் காட்டியபோது, அவர் வைத்தியசாலை வாகனத்தின் மூலம் அவரது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment