Tuesday, May 20, 2014

மன்னாரில் பெண்னொருவர் வெட்டிக் கொலை!

மன்னாரில் பெண்னொருவர் தனது வீட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். மன்னார், நானாட்டான் பகுதியில் இந்த கொலைச் சம்பவம் நேற்று மாலை 04 மணி தொடக்கம் 05 மணி வரையான காலப்பகுயில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். நீதவான் விசாரணைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லை. கொலைச் சம்பவம் தொடர்பில் முருங்கன் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com