Tuesday, May 20, 2014

காலி - உனவட்டுனவில் வாகன விபத்து.... இரு ஜேர்மனியர்கள் பலி!

காலி உனவட்டுன பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு ஜெர்மனியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்டிருந்த இரண்டு ஜெர்மனியர்களே விபத்தில் உயிரிழந்துள்ளனர். தனியார் பேரூந்துடன் குறித்த ஜெர்மனியர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு ஜெர்மனியப் பிரஜை சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மற்றையவர் கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். ஜெர்மனியப் பிரஜைகள் தலைக் கவசம் அணிந்து மோட்டார் சைக்கிளில் பயணிக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com