Tuesday, May 20, 2014

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பாடல்களையும், படங்களையும் வைத்திருந்த நபர் மட்டக்களப்பில் கைது!

எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பாடல்களையும், படங்களையும் வைத்திருந்த நபர் ஒருவர் மட்டக்களப்பு, வெல்லாவெளி பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார். சந்தேகநபர் தனது கையடக்க தொலைபேசியில் எல்.ரி.ரி.ஈ இயக்கத்தின் பாடல்களையும், படங்களையும் வைத்திருந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.

இந்த சந்தேகநபர் கடந்த 17 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டார். பின்னர் சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அஜித் ரோஹண கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com