Thursday, May 15, 2014

தேசத்தின் மகுடத்தை தெற்கில் வைத்தே தீருவேன்!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஒளித்துக் கொள்வதற்காக இடம் தேடிச் செல்ல வேண்டும் என உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போது, “அனைத்து” என்பது அரசாங்கம் அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த ஆண்டு தேசத்திற்கு மகுடம் (தெயட்ட கிருல) கண்காட்சி ருகுணு பல்கலைக் கழகத்தில் நடைபெறுவதற்கு விட மாட்டோம் என வாய் கிழியக் கத்துகின்றது. அது அவர்களின் அறிவீனமாகும் எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர், யார் என்னதான் சொன்னாலும் அது செல்லுபடியாகாது. நாங்கள் அங்குதான் நடாத்துவது என்று இறுதித் தீர்மானம் எடுத்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சென்ற ஆண்டு தேசத்திற்கு மகுடம் வடமேல் மாகாண பல்கலைக்கழக முன்றலிலேயே நடைபெற்றது. அதனால் பல்கலைக்கழகம் பாரிய நன்மை அடைந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com