மாணவியைக் கடத்தி குடும்பம் நடத்திய 18 வயதான இளைஞன் கைது !! - சிலாபத்தில்
14 வயதான பாடசாலை மாணவியை பெற்றோருக்கு தெரியாமல் கடத்திச் சென்று மூன்று மாதம் குடும்பம் நடத்திய 18 வயதான இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். சிலாபம் - மஹா விலத்தமவ பிரதேசத்தை சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப் பட்டுள்ளார். பிங்கிரிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் பயின்று வந்த சிலாபம் முக்குணுவட்டுவன பகுதியை சேர்ந்த மாணவியே இளைஞரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.
தமது மகள் கடந்த மூன்று மாதங்களாக காணாமல் போயுள்ளதாக பெற்றோர் சிலாபம் பொலிஸ் நிலையத்தின் முறைப்பாடு செய்திருந்தனர். அத்துடன் பெற்றோரும் மகளை தேடியுள்ளதுடன், மகள் வெயாங்கொட பிரதேசத்தில் இருப்பதாக அவர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மகளுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்ட பெற்றோர், மகளை வீட்டுக்கு வரவழைத்துள்ளனர். சந்தேக நபரான இளைஞருக்கும், தனக்கும் காதல் தொடர்பு இருந்தாகவும் சந்தேக நபர் தன்னை வெயாங்கொட பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று வாடகை வீட்டில் தங்க வைத்து தன்னுடன் குடித்தனம் நடத்தி வந்ததாக மாணவி பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து திருமண வயதை அடையாத சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர். சந்தேக நபர் சிலாபம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment