Tuesday, April 15, 2014

சுட்டுக்கொல்லப்பட்ட கோபி , அப்பன் ஆகியோரின் தாய்மார் விடுதலை. மீண்டுமொரு யுத்தத்திற்கு இடமளியோம். அஜித் ரோஹண

தாய்நாட்டில் மீண்டும் ஒருமுறை பயங்கரவாதம் தலைதூக்க இடமளிக்க போவதில்லை என்றம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் மீண்டும் யுத்தம் ஒன்று ஏற்படுவதை ஒரு போதும் விரும்புவதில்லையென்பது அரசாங்கத்தின் நம்பிக்கையாகும் என்றும் தெரிவித்துள்ளார் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன. அண்மையில் மூவர் சுட்டுக்கொல்லப்பட்டமை மற்றும் பலர் கைதாகியுள்ளமை தொடர்பில் சுயாதீன தொலைக்காட்சிக்கு கருத்து தெருவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ள அவர் தொடர்ந்து தெரிவிக்கையில் நாட்டில் பயங்கரவாதத்தை தலைதூக்க செய்வதற்கு முயற்சி செய்த சுமார் 60 பேர் கைது செய்யப்பட்டதுடன் இவர்களில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இவர்களில் கோபி மற்றும் அப்பன் ஆகியோரின் தயாரும் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் நிலைமை தொடர்பில் விபரிக்கையில், அண்மையில் பளை பிரதேசத்தில் சுவரொட்டிகளுடன் இருவர் கைது செய்யப்பட்டனர். இதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் நாட்டில் மீண்டும் பயங்கரவாதத்தை தூண்டி விட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரியவந்தது. சந்தேகத்தின் பேரில் 60 பேர் கைது செய்யப்பட்டனர். பிரதான சந்தேக நபர்களான கோபி, தேவயென், அப்பன் ஆகியோரை தேடி விசேட தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் இவர்கள் மூவரும் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்துச் செல்லும் போது, கைது செய்யப்பட்ட 60 |பேரில் 15 பேர் விடுதலை செய்யப்பட்டனர். நான்கு பெண்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த பெண்களில் கோபி மற்றும் அப்பனின் தாயாரும் அடங்குகின்றனர். ஏனைய சந்தேக நபர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன. விசேடமாக எமது தாயகத்தில் மீண்டும் யுத்தம் ஒன்று எற்படுவதை தடுப்பதற்கு பயங்கரவாதம் தலை தூக்காமல் இருப்பதையும் நோக்காக கொண்டே இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. நாட்டிலுள்ள தமிழ், சிங்கள, முஸ்லிம் சகல இன மக்களும் இந்நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதை விரும்பவில்லை. பயங்கரவாதத்திற்கு புத்துயிரளிப்பதற்கு முயற்சிக்கும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் இடமளிக்க போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

1 comments :

Anonymous ,  April 15, 2014 at 9:51 PM  

Very nice and i hope our S.L Goverment on right track. Take care of TNA ministers like Sritharan MP, Mavai Senathirajah MP, Suresh Premachandran, Selvam Adaikkalanathan, Ariyanenthiran and Ananthi sasitharan.

Those all TNA terrorist groups have very very good deal with LTTE terrorist diasporas.

All those members,should be in arrest after the Sri Lnakan terror list. Dont make any delay!

Sri Lankan Government have all nesessary prof those, so dont delay for action.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com