Wednesday, April 16, 2014

ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு புகைப்படக் கலைஞர் கடலில் மூழ்கி மரணம்!

தங்கல்ல மெடில்ல கடலில் குளித்துக் கொண்டிருக்கும்போது, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவின் புகைப்படக் கலைஞரான 27 வயதுடைய திலங்க அமரக்கோன் இயற்கையெய்தியுள்ளார்.

நேற்று (15) கடலில் மூழ்கியுள்ளதுடன், அவசரமாக அவரைக் காப்பாற்றி தங்கல்ல வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்துள்ளனர். அதன்பின்னரே அவர் காலமாகியுள்ளார்.

குறித்த புகைப்படக் கலைஞர் மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com