Wednesday, April 16, 2014

விமல் உள்ளிட்ட அமைச்சர் ஐவருக்கு விவாதத்திற்கு வருமாறு சவால் விடுகிறது BBS

தங்களது அமைப்பானது, பயங்கரவாத அமைப்பு என குற்றம் சுமத்துகின்ற அமைச்சர்களை பொதுமேடையொன்றில் விவாவத்த்திற்கு அழைத்திருக்கிறது பொதுபல சேனா.

அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், டிலான் பெரேரா, வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச ஆகிய அமைச்சர்களுக்கு இவ்வரைகூவல் விடுத்துள்ளார்.

சர்வதேச புகழ் ஆய்வு நிறுவனமான ட்ரெக் நிறுவனத்தினால் பொதுபல சேனா பயங்கரவாத அமைப்பு என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்குக் காரணம் இவ்வமைச்சர்களின் தகவல்களே எனவும் அவர் அங்கு கருத்துரைத்துள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com