Tuesday, April 15, 2014

BBS பயங்கரவாத அமைப்பாக பெயர்பெற்றுவிட்டது...!

இலங்கையில் பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு குரல் கொடுப்பதாகக் கூறும் பொது பல சேனா ஒரு பயங்கரவாத அமைப்பாக பெயரிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவில் அரசியல் வன்முறைகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும் ‘பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ Terrorism Research & Analysis Consortium (TRAC) இந்த அறிவிப்பை விடுத்துள்ளது.

TRAC – Terrorism Research & Analysis Consortium -’ பயங்கரவாத ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு கூட்டமைப்பு’ என்பது உலக நாடுகளில் அரசியல் வன்முறை தொடர்பில் ஆராச்சி மற்றும் பகுப்பாய்வு செய்யும் சர்வதேச நிபுணர்களை கொண்ட ஒரு ஆய்வு மையமாகும்.

பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமைகான காரணத்தை விளக்கியுள்ள அமெரிக்காவை தளமாகக் கொண்டு இயங்கும் TRAC என்ற அமைப்பு “அவர்களின் நடவடிக்கைகள் மென்மையான இலக்குகள் மீது பயங்கரவாத செயல்களை ஒத்ததாக இருக்கிறது என தெரிவித்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடியன் தமிழ் காங்கிரஸ் மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புக்களையும் TRAC என்ற அமைப்பு பயங்கரவாத அமைப்பாக பட்டியலிட்டுள்ளது.

பொதுபல சேனா அமைப்பு இலங்கையில் முஸ்லிம் மற்றும் கிறிஸ்வத மதங்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Terrorism Research & Analysis Consortium (TRAC) இன் அறிவிப்பு (AD)

1 comments :

ஆர்யா ,  April 15, 2014 at 3:06 PM  

அமெரிக்காவுடன் கூட்டாளியாக இருக்கும் பொழுது பின் லாடனும் பயங்கரவாதி அல்ல , அமெரிக்காவை எதிர்க்கும் பொழுது தான் அவர் பயன்கரவாதியானார். மேற்குலகுக்கு யார் பயங்கரவாதி என்பது அவர்களின் சுயநலத்தை பொறுத்தது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com