Tuesday, April 15, 2014

இந்திய - இலங்கை மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வி! - தமிழ்நாடு அரசு காரணம்!!

இந்திய இலங்கை மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைவதற்கு தமிழ்நாடு அரசாங்கமே பொறுப்பு கூற வேண்டுமென இந்திய கடற்றொழில் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இந்திய மத்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் இணக்கப்பாட்டின் பேரில் மீனவர் நெருக்கடி தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அங்கு பல தீர்மானங்கள் எட்டப்பட்டதுடன் தீர்வுகளுக்கு 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டுமென இரு நாடுகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்தனர்.

எனினும், 2 ஆம் கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததுடன் இதற்கு இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெலலிதா ஜெயராமின் அரசாங்கம் நேரடியாக பொறுப்பு கூற வேண்டுமென குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளத. இஅத்துடன் இச் செயற்பாடுகள் காரணமாக முக்கிய பிரச்சினைகளுக்கு நட்புறவு ரீதியிலான தீர்வுகளை எட்டமுடியாமல்போய் விட்டதாக இந்திய கடற்றொழில் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.

சென்னையில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து தீர்வுகளை எட்டமுடியவில்லை. தீர்வினை பெற்றுக் கொள்ளும் நோக்கில் 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெறவிருந்தது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com