Tuesday, April 15, 2014

சித்திரைப் புத்தாண்டு கொண்டாடச் சென்றவர் வாகன விபத்தில்!

மட்டு - வாகறைப் பொலிஸ் பிரிவில் சம்பவம்!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகறை பொலிஸ் பிரிவில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றொருவர் காயமடைந்துள்ளார்.

கதிரவேலி பால்ச்சேனையை சேர்ந்த இரு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் கல்லடியிலுள்ள உறவினர் வீட்டிற்கு சித்திரை புத்தாண்டு கொண்டாடச் சென்று திரும்பும் வேளையில் வீதி சமிக்ஞைக்காக நடப்பட்டிருந்த கம்பத்தில் மோதுண்டு இடம்பெற்ற விபத்தில் சிக்குண்டுதாக வாகறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் வாகறை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்து மேலதிக சிகிச்சைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி 18 வயதுடைய நாகராசா மோகன்ராஜா என்பவர் உயிரிழந்ததுடன் அவரது நண்பர் கதிர்காம தம்பி ஜீவேந்திரன் எனும் 18 வயது இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com