Sunday, April 13, 2014

இலங்கையைக் குழப்பியடிக்க வடக்கில் இரகசியப் பேச்சில் இங்கிலாந்து புலிகளின் முகவர்...!

இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு வருகைதந்துள்ள புலிகளின் முகவர் ஒருவர் இரகசியமாக வடக்கில் சுற்றுலாப் பயணத்தில் இருப்பதாக பாதுகாப்புப் பிரிவின் உளவுத் துறை குறிப்பிடுகின்றது.

குறித்த நபர் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக பேச்சுவார்த்தை நடாத்திவருவதுடன், அதற்காக பண உதவி வழங்குவதற்காகவே இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐ.ரீ. சம்பந்தன் எனக் குறிப்பிடப்படும் குறித்த சந்தேகநபர், 30 ஆண்டுகளுக்கு மேலாக பிரித்தானியாவில் பிரசாவுரிமை பெற்றிருப்பதுடன், இலண்டனிலுள்ள புலி ஆதாரவாளர்களுடனும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும் நீண்டகாலமாக இரகசிய தொடர்பு வைத்துவந்துள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இலண்டன் அரசியல் விடயங்களுக்குப் பொறுப்பாக ஐ.ரீ. சம்பந்தன் இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com