Sunday, April 13, 2014

ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நிற்பதற்கு சோபித்த தேரர் இரகசியப் பேச்சு!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியிலிருந்து நிறுத்தப்படும் பொது வேட்பாளர் தொடர்பில் மாதுலுவாவே சோபித்த தேரர் மற்றும் அரசாங்கத்தின் சிறுபான்மைக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள், அமைச்சர்கள் பலரிடையே இரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக அறியவருகின்றது.

மிக விரைவில் ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடாத்தப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால் அதற்கு இப்பொழுதே முன்னாயத்தப்பட வேண்டும் என தெளிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை அரசாங்கத்தின் மேல்மட்டத்திற்கும் சென்றுள்ளதெனத் மேலும் தெரியவருகின்றது.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com