Tuesday, April 29, 2014

நம்மிடமுள்ள ஆதாரங்களை வெளியிட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும்! - BBS

நாட்டில் பௌத்த மத்த்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பொதுபல சேனாவிடமிருக்கும் ஆதாரங்களை வெளியிட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் “மவ்பிம” நாளிதழுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் மதப் பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவு அநாவசியமானது எனவும், இரண்டு மூன்று வருடங்களுக்குள் இந்த மதப் பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவை நிறுத்தாவிட்டால், காலப்போக்கில் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது போல் ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் இம்மதப் பிணக்குகளுக்கான பொலிஸ் பிரிவு அமைக்கப்பட வேண்டிவரும் என ஹெல உறுமயவின் பா.உ. அமைச்சர் சம்பிக்க ரணவக்க கூறிய கருத்தில் தவறுகள் ஏதுமில்லை எனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com