Tuesday, April 29, 2014

பொதுபல சேனாவின் ஆய்வு! இலட்சக் கணக்கில் சிங்களப் பெண்கள் மதமாற்றம்!

சென்ற 10 ஆண்டு காலப்பகுதியில் சிங்கள பௌத்த பெண்மணிகள் 890,000 மேற்பட்டோர் கருத்தடை செய்யப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு குறிப்பிடுகிறது.

அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேர்ர், “சிறு குடும்பம் பொன்மயம்” என்ற திட்டத்தை உபயோகித்து நாட்டுக்குள் செயற்படுகின்ற அரச சார்பற்ற அமைப்புக்கள் இத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இக் காலப்பகுதியில் 1.5 1.5% கத்தோலிக்கர்கள் மதமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள். மேலும், கொழும்பு மாவட்டத்திலுள்ள சிங்கள பௌத்தர்கள் ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமானோர் மற்றும் வெளிநாட்டுக்குச் சென்றோரில் 80 000 பேரும், இலங்கையரில் இலட்சக் கணக்கானோரும் பிறமதங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அவர் கொழும்பில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றின் போது குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com