Tuesday, April 29, 2014

சுழிபுர கடலில் வைரவரின் அதிசய சிலை ! (படங்கள்)

யாழ்.குடாநாட்டிலிருந்து இந்துக் கடவுளர்களின் விக்கிரகங்கள் திருடப்பட்டு வருகின்ற நிலையில் கடலில் இருந்து மேற்படி விக்கிரகம் மீட்கப்பட்டுள்ளது. இந்த விக்கிரகத்தை மீட்ட இளைஞர்களும் ஏனைய இளைஞர்களும் சேர்ந்து மிகவும் பக்திபூர்வமாக விக்கிரகத்தை சம்புநாதஈஸ்வரத்தில் ஒப்படை த்தமை குறிப்பிடத்தக்கது. சுழிபுரம்- திருவடிநிலைக் கடலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை (27.04.2014) வைரவரின் கருங்கல் சிலையொன்று மீட்கப்பட்டுள்ளது.

மேற்படி கடலில் பிற்பகல் வட்டு. பிளவத்தை இளைஞர்கள் சிலர் குளித்துக்கொண்டிருந்தபோது கரையிலிருந்து சுமார் இருநூற்றைம்பது தூரம் உள்ளே ஆழமான கடலில் இந்தச் சிலை கண்டெடுக்கப்பட்டது. வேட்டியால் சுற்றப்பட்ட நிலையிலிருந்து இந்தச் சிலை தொடர்பாக பொன்னாலை மற்றும் சுழிபுரம் மேற்கு இளைஞர்களுக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு சென்ற இளைஞர்கள் குறித்த சிலையை நேற்றிரவு 8 மணியளவில் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்திற்கு எடுத்துச் சென்று அங்குள்ள நரசிங்க சித்தர் சுவாமிகளின் பூசை வழிபாடுகளுடன் அந்த ஆலயத்தில் வைத்துள்ளனர்.













0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com