Tuesday, March 11, 2014

நாய்க்கு பயந்து தலைதெறிக்க ஓடிய சிறுத்தை.... சுவாரஷ்யமான சம்பவம்!! (வீடியோ)

மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் நாய்க்கு பயந்து சிறுத்தைப் புலி ஓடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. மும்பை கோரேகாவ் சஞ்சய் காந்தி பூங்கா அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின் மாடியில் இருந்து சஞ்சய் காந்தி பூங்கா மற்றும் காட்டு பகுதியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை கண்டு ரசிக்க முடியும். நேற்று முன்தினம் குடி யிருப்புவாசிகள் அந்த கட்டிட வளாகத்தில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கமெராவில் கடந்த பிப்ரவரி 26ம் திகதி இரவு பதிவாகி இருந்த காட்சிகளை பார்த்தனர்.

அப்போது, அதிகாலை 3 மணியளவில் சிறுத்தைப்புலி ஒன்று குடியிருப்பு வளாக த்திற்குள் நுழையும் காட்சி அதில் பதிவாகி இருந்தது. சற்று நேரம் சிறுத்தைப்புலி உறுமி கொண்டே குடியிருப்பு வளாகத்தில் அங்கும், இங்குமாக அலைந்து கொண்டு இருந்தது. அப்போது அவர்கள் சற்றும் எதிர்பார்க்காத வகையில் குடியிருப்பின் வாகன நிறுத்தத்திற்குள் நுழைந்த சிறுத்தை புலி சில நிமிடங்களில் ரத்த காயங்களுடன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடி வந்தது.

மக்கள் செல்லமாக வளர்த்த நாய் ராக்கி விடாமல் வீறு கொண்ட வேங்கையாய் குரைத்து, அங்கிருந்து சிறுத்தை புலியை கட்டிடத்திற்கு வெளியே துரத்தியது. இதுகுறித்து அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஒருவர் கூறுகையில், 2 ஆண்டுகளுக்கு முன்பு தெருவில் குட்டியாக கிடந்த அந்த நாயை நான் தான் குடியிருப்பிற்கு எடுத்து வந்தேன். நாய் மிகவும் அழகாக இருந்தால் குடியிருப்பில் உள்ள அனைவரும் அதை மிகவும் நேசித்தனர். ஆனால் இன்று அது எங்களின் உயிர்களை பாதுகாத்து உள்ளது.

எங்கள் ராக்கி சிறுத்தைப்புலியை வீரத்துடன் துரத்திய காணொளியை பார்க்கும் போது ஆச்சரியமாக இருந்தது. எனவே தற்போது ராக்கியை 'ராக்கி டைகர்' என்றே அனைவரும் அழைப்பதாக கூறியுள்ளார்.



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com